Skip to main content

நக்கீரன் மற்றும் ஆசிரியர் குறித்து பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் கருத்து...

Published on 10/10/2018 | Edited on 10/10/2018

நேற்று ஆசிரியர் நக்கீரன் கோபால் ஆளுநர் மாளிகையிலிருந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். பின் அந்த வழக்கில் முகாந்தரம் இல்லை என்றுகூறி நீதிபதி விடுதலை செய்தார். அவர் கைது செய்யப்பட்ட போதும், பின்னர் விடுதலை செய்யப்பட்டபோதும் பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டனர். அரசியல் கட்சிகள் அறிக்கைகள் விட்டன, அவற்றுள் சில.

 

யாரைக் கைது செய்கிறாய்?
உன் சொந்த அம்மாவை அல்ல
சொத்து அம்மாவுக்கே
பயப்படாதவரப்பா - கலைஞர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் திருமாவேலன்.


வாழ்த்துகளை தவிர வேறென்ன சொல்லமுடியும் -ஜூனியர் விகடன் பொறுப்பாசிரியர் பரகத் அலி
 

Nakkeeran Gopal is the last spark of fearless journalism we have. -எழுத்தாளர் ஷாஜி சென்

 

தமிழக வரலாற்றில் ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட முதல் பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் -நியூஸ் 7 இணை ஆசிரியர் நெல்சன் சேவியர்


அந்த மீசைக்காரரை ரெண்டு மணி நேரம் உள்ள உட்கார வைக்கிறதுக்குத்தான் இத்தனை பேர் கூடி விவாதிச்சாங்களாய்யா? -எழுத்தாளர் வா.மணிகண்டன்

 

 எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் என ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி...