Skip to main content

கனிமொழியின் ஸ்வீட் சர்ப்ரைஸ்.. நெகிழ்ச்சியில் பழங்குடியின மாணவி!

Published on 08/09/2021 | Edited on 09/09/2021

 

Kanimozhi help for tribal female student

 

கல்லூரியில் இடம் கிடைக்காததால், சாலையில் பாட்டில் பொறுக்கிக்கொண்டு இருந்த மாணவியை, தனியார் கல்லூரியில் கட்டணமின்றி சேர்த்துக்கொள்ள வழிவகை செய்துள்ளார் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி. கனிமொழியின் இந்த அதிரடி நடவடிக்கை பல தரப்பிலும் பாராட்டப்பட்டு வருகிறது.


தமிழகத்தில் மொத்தம் 30-க்கும் மேற்பட்ட பழங்குடிச் சமூகத்தினர் உள்ளனர். இவர்களில் குறும்பர், கோத்தர், தோடர், இருளர், பனியர், காட்டுநாயக்கர் ஆகிய ஆறு சமூகத்தினரும் 'தொன்மைப் பழங்குடி குழுக்கள்' என வரையறை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான காட்டுநாயக்கர் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். நிலையான வேலையில்லாமல் ஊசிமணி -பாசிமணி விற்றும், சவரி முடி தயாரித்தும், குறி சொல்லியும், பாட்டில் சேகரித்தும் அன்றாடப் பிழைப்பை நடத்தி வருகின்றனர். தினக் கூலி வேலைக்குச் செல்ல முயன்றால் கூட, சாதியைக் காரணம் காட்டி இதர சாதி மக்கள் புறக்கணிக்கின்றனர். இதனால், இந்த தொழிலில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து, வீட்டில் அடுப்பெரிக்க வேண்டிய இக்கட்டான சூழலில் தவித்து வருகின்றனர்.

 

Kanimozhi help for tribal female student


தென்காசி மாவட்டம், ஆழ்வார் குறிச்சியிலுள்ளது திருநீலகண்ட விநாயகர் கோவில் தெரு. இங்கு, காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் காட்டு நாயக்கர் சமுதாயத்தில், 10-ஆம் வகுப்பை தாண்டியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நிரந்தர வேலையின்றி தவித்து வரும் இப்பகுதி மக்கள், தங்களின் குழந்தைகளாவது உயர்ந்த நிலைக்குச் செல்லவேண்டும் எனப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர். இந்தத் துயர வாழ்வில் இருந்து வெளியேற கல்விதான் ஒரே ஆயுதம் என அவர்கள் முடிவெடுத்தனர். ஆனால், அதற்குப் பெரும் தடையாக எழுந்து நின்றது சாதிச் சான்றிதழ். 


மேற்சொன்ன திருநீலகண்ட விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருகிறார் காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த ஷங்கர். இவருக்கு விஜயலட்சுமி எனும் மகள் உண்டு. இவர் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்துவிட்டு, கனவுகளுடன் கல்லூரிப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால், இவரது விண்ணப்பம், கல்லூரி நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. காரணம், சாதிச் சான்றிதழ் எனச் சொல்லப்பட்டுள்ளது. இதையடுத்து ஷங்கரும் அவரது மகள் விஜயலக்ஷ்மியும் தாசில்தார் அலுவலகத்துக்குச் சென்றனர். இதெல்லாம், என் கட்டுப்பாட்டில் வராது நீங்கள் கலெக்டர் அலுவலகம் செல்லுங்கள் என தாசில்தார் கையை விரித்துள்ளார். கலெக்டர் அலுவலகம் சென்று சாதிச் சான்றிதழ் குறித்து கேட்டபோது, நீங்கள் குறிப்பிடும் அந்த இடத்தில்தான் வசிக்கிறீர்கள் என்பதற்கான ஆதாரம் எங்களிடம் இல்லை. அத்துடன், நீங்கள் சிறுபான்மைப் பிரிவினராக இருக்குறீர்கள். என என்னென்னவோ காரணம் சொல்லி சாதிச் சான்றிதழ் கொடுப்பதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது எனத் தகவல் கூறியுள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்து நின்றனர் விஜயலக்ஷமி குடும்பத்தினர்.

 

Kanimozhi help for tribal female student


இது குறித்து விஜயலக்ஷ்மியின் அப்பா ஷங்கர் நம்மிடம் பேசும்போது, "நான் ஏழாவது வரை படித்து இருக்கிறேன். என்னுடைய சாதிச் சான்றிதழில் காட்டு நாயக்கர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதைக் கொண்டு எனது குழந்தைகளை பள்ளிப் படிப்பில் சேர்த்துவிட்டேன். என்னுடைய மகள் விஜலக்ஷ்மி மேல்நிலைப் பள்ளி வகுப்பை முடிந்தவுடன் கல்லூரியில் சேர்க்க முயற்சித்தோம். பள்ளிப் படிப்புக்கு சாதிச் சான்றிதழ் தடையாக இருக்கவில்லை. ஆனால், கல்லூரி நிர்வாகமோ, சாதிச்சான்றிதழ் இருந்தால்தான் விஜயலக்ஷ்மிக்கு அனுமதி கிடைக்கும் எனக் கூறிவிட்டது. மாவட்ட நிர்வாகமோ மௌனம் சாதிக்கிறது. சாதிச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கல்வி, வேலைவாய்ப்புகளில் போட்டியிட முடியும். இல்லையென்றால் வெந்ததை தின்று விதிவந்தால் சாக வேண்டியதுதான். காலேஜ் போக ஆசைப்பட்ட என் மகள் இப்போது பாட்டில் பொறுக்கிக்கொண்டு இருக்கிறாள்” என்றார் சன்னக் குரலில்.


இந்த நிலையில், மாணவி விஜயலட்சுமியின் நிலை குறித்து அறிந்த திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, உடனடியாக அந்த மாணவியின் குடும்பத்தாரிடம் தொடர்புகொண்டு பேசினார். அதையடுத்து தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் பேசிய கனிமொழி, அந்த மாணவிக்கான சாதிச் சான்றிதழை விரைந்து வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அத்துடன், அந்த மாணவியை, அருகில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் எந்தவிதக் கட்டணமுமின்றி சேர்த்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளார். மேலும், மற்ற மாணவர்களுக்கும் சாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். கனிமொழியின் இந்த திடீர் நடவடிக்கை காட்டு நாயக்கர் சமூக மக்களை ஆனந்தக் கண்ணீரில் நனைத்துள்ளது.

 

 

 

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.