Skip to main content

''நாளை முதல் நடக்கமுடியாது என்று சொன்னால்...''- மனம்விட்டு பேசிய ராகுல் #2

Published on 07/03/2021 | Edited on 07/03/2021

முந்தைய பகுதியை வாசிக்க...''ராகுல் காந்தியுடன் நான்...''- ஒரு மாற்றுத்திறனாளியின் மறக்க முடியாத அனுபவம்!

கட்டுரையாளர் :அண்ணாமலை

 

 ''If some to you can not walk from tomorrow ... '' said Rahul # 2

 

அவசர அவசரமாக அந்த மண்டபத்திற்குச் சென்று பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு உள்ளே சென்று அமர்ந்தோம். காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அங்கு மதிய உணவு அருந்திக்கொண்டிருந்தனர். அவர்களோடு சேர்த்து எங்களுக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது. சிறிது நேரத்தில் ராகுல் காந்தி அவர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் வந்து என்னை அவர் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றனர். மனதுக்குள் பல்வேறு எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்த போது நேரடியாக அவர் முன் என்னை நிறுத்தினர். வாழ்நாள் கனவு கண்முன் நிஜமான தருணம்! என்னை நான் அறிமுகம் செய்துகொண்ட பிறகு என்னுடைய உடல் சார்ந்த பிரச்சினைகள் பற்றி விசாரித்தார். அதன் பிறகு அவர் என்னிடம் கேட்ட சில கேள்விகள் என்னை மலைப்பின் உச்சிக்கு கொண்டு சென்றன. அவர் மீதான மரியாதையைப் பன்மடங்கு அதிகமாக்கின. என் வாழ்வில் மறக்க முடியாத உரையாடலாக அமைந்த அவருடனான அந்த 25 நிமிட உரையாடலின் சில துளிகள் இதோ...

 

ராகுல் காந்தி: நாளை முதல் நீ நடக்க முடியாது என்று என்னிடம் யாராவது சொன்னால் நான் என்ன மனநிலைக்கு செல்வேன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் உனக்கு தினமும் மற்றவரது உதவி தேவைப்படுகிறது. அதையெல்லாம் மீறி எப்படி உன்னால் வாழ்வில் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்ல முடிகிறது?

 

நான்: அதற்கு முழுமுதற் காரணம் என்னுடைய அம்மாதான். சிறுவயதில் இருந்தே 'நீ எதற்காகவும் பின்தங்கி விடக் கூடாது. அனைத்து வகைகளிலும் நீ மற்றவர்களோடு போட்டி போடக்கூடிய ஒருவனாக இருக்க வேண்டும்' என்று சொல்லி அவர் என்னை வளர்த்தது தான் மிக முக்கிய காரணம்' (இதை நான் சொன்னவுடன் உடனடியாக தன் இருக்கையிலிருந்து எழுந்து என்னுடைய அம்மாவிற்கு வணக்கம் சொன்னார்). மேலும் என்னுடைய தந்தை, உறவினர்கள், நண்பர்கள் என்று யாருமே என்னை ஒரு மாற்றுத்திறனாளியாக நினைக்க வைத்ததே இல்லை. தங்களில் ஒருவராகத் தான் என்னை அனைவரும் பார்ப்பார்கள் (உடனே அம்மாவிடம் திரும்பி 'அப்படியா? நீங்கள் இவரை வித்தியாசமாக உணரவைத்ததே இல்லையா?' என்று ஆச்சரியமாகக் கேட்டார்) அதனால் நான் என்னுடைய குறையை நினைத்து ஒருநாளும் வருந்தியதில்லை. நான் செல்ல வேண்டிய பாதையை மட்டும் நினைத்து ஓடிக்கொண்டே இருக்கிறேன்.

 

 ''If some to you can not walk from tomorrow ... '' said Rahul # 2

 

ராகுல் காந்தி: உடல் ரீதியாக உனக்கு ஏற்பட்டுள்ள பலவீனத்தை சமன் செய்ய எது உனக்கு பலமாக இருக்கிறது என்று கருதுகிறாய்? ஏனெனில், ஒருவருக்கு ஒரு பலவீனம் இருந்தால் அதை balance செய்வதற்கு இன்னொரு பலமான விஷயம் நிச்சயமாக இருக்கும் என்பது என்னுடைய திடமான நம்பிக்கை.

 

நான்: என்னுடைய அறிவுத்திறனையே என்னுடைய பலமாகக் கருதுகிறேன். உடல் ரீதியாக எனக்கு ஏற்பட்டுள்ள பலவீனத்தை அதுதான் சமன் செய்கிறது என்று நினைக்கிறேன்.

 

ராகுல் காந்தி: எதை வைத்து அப்படி சொல்கிறாய்?

 

நான்: எனக்கு எழுதுவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் புலமை உண்டு. எழுத்தின் மீது உள்ள என்னுடைய ஆர்வம் தான் எனக்கு பலம். நான் தனியாக Blog பக்கம் வைத்திருக்கிறேன். Freelance Journalist ஆக இருக்கிறேன். மேலும் என்னுடைய சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். யூடியூபில் கூட ஒரு சேனல் தொடங்கி சில வீடியோக்கள் பதிவிட்டிருக்கிறேன்.  

 

ராகுல் காந்தி: என்ன தலைப்புகளில் யூடியூபில் பேசியிருக்கிறாய்?  

 

நான்: உங்களைப் பற்றி கூட ஒரு வீடியோ செய்திருக்கிறேன். "ராகுல் காந்தியைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது?" என்பதுதான் அதன் தலைப்பு.

 

 ''If some to you can not walk from tomorrow ... '' said Rahul # 2

 

இப்படி நீண்டது எங்களுடைய உரையாடல். அவர் என்னிடம் அரசியலும் பேசினார். நேரம் சென்றதே தெரியாமல் அவர் கேட்கும் மிக நுட்பமான கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். 25 அருமையான நிமிடங்கள் கடந்தன. அடுத்த நிகழ்ச்சிக்கு நேரமானதால் அவர் கிளம்ப வேண்டிய சூழ்நிலை. எழுந்து அம்மாவிடம் நெகிழ்ச்சியாகக் கை கொடுத்தவர், அவரை நோக்கித் திரும்பியிருந்த என்னுடைய வீல்சேரை புகைப்படம் எடுக்க ஏதுவாக அவரே திருப்பினார். புகைப்படம் எடுக்கத் தயாராகி என் தோள்களின் மீது அவர் கைவைத்தபோது ஏற்பட்ட சிலிர்ப்பு எனக்கு இன்னமும் இருக்கிறது. "நிச்சயம் உன்னுடன் நான் நேரடித் தொடர்பில் இருப்பேன்" என்றார். பிரமிப்பின் உச்சத்தில் இருந்த நான் நன்றியோடு புன்னகை செய்துவிட்டு அந்த அறையிலிருந்து வெளியே வந்தேன்.

 

சாதாரண மனிதர்களின் ஆசைகளைத் தலைவர்கள் நிறைவேற்றுவது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள், குறைந்தது ஒரு நிமிடம் பேசுவார்கள். அவ்வளவுதான். ஆனால் என்னைப் பற்றித் தெரிந்தவுடன் உடனடியாக அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தது, காலையில் நான் ஏக்கத்தோடு வைத்த வேண்டுகோளை நினைவில் வைத்து மதியம் என்னை அழைத்து 25 நிமிடங்கள் உரையாடியதெல்லாம் இதுவரை எங்கும் கேள்விப்படாத ஒன்று. அவரிடம் மேற்கொண்ட உரையாடலில் இருந்து அவர் எப்படியொரு பண்பட்ட மனிதர் என்பதும், மனித உணர்வுகளுக்கு அவர் எந்த அளவு மதிப்பளிக்கிறார் என்பதும் புரிந்தது. என்னிடம் அவர் கேட்ட கேள்விகளின் மூலம் அவருடைய அறிவாற்றலின் மீது மிகுந்த பிரமிப்பு ஏற்பட்டது. உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஒருவர் தான் தலைமைப் பொறுப்புக்கு உகந்தவர். அதனால் தான் இந்தியா கண்ட மிகச்சிறந்த தலைவர்களில் ராகுல் காந்தியும் ஒருவர் என்று நினைக்கிறேன். இன்றோ அல்லது நாளையோ இந்திய நாட்டின் பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார் என்று திடமாக நம்புகிறேன். 

 

 

 

 

 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.