Skip to main content

"வா அதற்காக விழா எடுப்போம்" சென்னை தினம்...உணர்வுகளின் வெளிப்பாடு...

Published on 22/08/2022 | Edited on 22/08/2022

 

chennai

 

சென்னை... இது வெறும் ஊரின் பெயர் அல்ல. தமிழக மக்களின் அடையாளம். எப்பொழுதும் தமிழ் மக்களின் கருத்து, "சென்னைக்குப் போனால் பொழச்சிக்கலாம்பா" என்பதே. எந்த ஒரு மனிதனும் முதலில் சென்னைக்கு வரும்போது முதலில் சென்னை அவனை பயமுறுத்தும். அதன் பின் பிரமிக்க வைக்கும். பின்னர் தன்னுடன் பழகவிடும். கடைசியில் தன்னுடன் அரவணைத்துக் கொள்ளும். வந்தாரை வாழ வைக்கும் சென்னை நம் எல்லோரையும் வாழ வைக்கிறது.

 

இன்றுடன் சென்னை தினம் பிறந்து 383 ஆண்டு ஆகிறது. வருடத்தில் ஒரு நாள் ஒதுக்கி சென்னையின் பெருமையை பேசி விட முடியுமா.... பருவம் அடைந்த பெண்ணைப்போல நாளுக்கு நாள் மெறுகேறி பார்ப்போரை எல்லாம் தன்னகத்தே காதல் கொள்ளவைக்கும் திறன் சென்னைக்கு உண்டு. நாள் தோறும் பேசினாலும் தீர்ந்து விடாத, பேசி பேசி சலிக்காத வரலாறை சென்னை தன்னுடன் கொண்டுள்ளது. இந்தியாவின் வளர்ந்த நகரங்களை எல்லாம் ஒப்பிட்டால் சென்னையின் வளர்ச்சி அபரிமிதமானது. தமிழகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியும் சென்னை என்ற ஒற்றை நகரைக் கொண்டு கணிக்கலாம்.  எந்த ஒரு விஷயத்துக்கும் நேர்மறை எதிர்மறை என இரண்டும் இருக்கும். நேர்மறை ஒரு படி அதிகம் இருந்தால் அதுவே போதும்.அந்த வகையில் சென்னை நேர்மறையாக பல படிகள் மேலே இருக்கின்றது. 

 

சென்னையின் வரலாற்றைத் தாண்டி அது தற்போது கொண்டிருக்கும் அழகியலையும் சென்னையின் தாக்கம் கிராமங்களில் என்ன என்பன போன்ற சில விஷயங்களை மேலோட்டமாக தூசு தட்டினால் இந்த கட்டுரை கிடைத்தது. 

 

சென்னையின் ஒவ்வொரு பகுதிக்கும் தனிச்சிறப்பு, பழைய வரலாறு உள்ளது. இன்றும் திராவிட மாநிலங்கள் என கூறப்படும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என பல்வேறு மாநில மக்களும் நம்மை நம்பி சென்னையை நம்பி வந்து வாழ்கின்றனர். பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு மொழிகள் பல ஊர்களின் மக்கள் என சென்னைக்கு பல்வேறு முகங்கள் உண்டு. உலகின் மிகத் தொன்மையான மாநகராட்சி சென்னை.

 

பெண்களுக்கு சுதந்திரமான சிறைகளை கொண்டது கிராமங்கள். சென்னைக்கு படிப்பிற்காகவோ, பணிக்காகவோ பயணிக்கும் கிராமத்து பெண்களுக்கு ஆகப்பெரிய  விடுதலை உணர்வு தானாகவே சென்னையில் கிடைக்கும்.  கிராமத்தில் இருந்து தன் சமூகப் பெருமையை கொண்டு வருபருக்கும் சரி,  தன் சமூகத்தின் பெயரை வெளியில் கூற விரும்பாதவர்க்கும் சரி, பணக்காரர் ஆனாலும் சரி ஏழையானாலும் சரி எந்த மொழியானாலும் சரி  அனைவருக்கும் ஒரே மரியாதையையும் ஒரே விதமான வரவேற்பையும் அளிக்கும் ஊர் இது  

 

கிராமங்களில் இருந்து சென்னைக்கு செல்ல ஒரு பேருந்து கிடைத்தால் போதும். சென்னையில் இருந்து நாம் செல்ல வேண்டிய பகுதிக்கு இங்கிருக்கும் ஆட்டோ நண்பர்கள் சென்று சேர்த்துவிடுவர். "என்ன தல எங்க போகணும்" என எப்போதும் அனைவரையும் வரவேற்க தயாராகவே சென்னை எப்போதும் இருக்கும்.

 

சென்னைக்கு மற்றுமொரு சிறப்பு. உணவு. மாதம் எவ்வளவு ரூபாய் சம்பளமாக வாங்கினாலும் சரி அதற்கேற்றார் போல் மூன்று வேலையும் சாப்பிடும் வகையில் உணவகங்கள் வீதிக்கு வீதி இருக்கும். நம் பொருளாதார தரத்திற்கு ஏற்ற உணவகங்களில் இருந்து துணிக்கடைகள் வரை அத்தனையும் கிடைக்கும்

 

இயற்கை எப்படி அடித்தாலும் இந்த சென்னை தாங்கும். மழை, வெயில், புயல், வெள்ளம் என எந்த தட்ப வெப்ப நிலையாகிலும் தன்னை தகவமைத்துக் கொள்ளும் தன்மை இதற்குண்டு. உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா பெருந்தொற்றையும் சென்னை சமாளித்து மீண்டு எழுந்து வந்திருக்கிறது. இவையனைத்தையும் ஒரு சேரப் பார்க்கும் ஒரே ஊர் சென்னை. ஒரு பக்கம் கானா பாடல்கள் நம்மை நடனம் ஆட வைத்தால்  மறுபக்கம் சங்கீத சபாக்கள் மெல்லிசையை உணர வைக்கும். சென்னையின் ஒவ்வொரு விடியலும் புதுவிதமான உணர்வை தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது. 

 

இங்கிருக்கும் எல்லாம் மக்களும் ஒரு தாயின் பிள்ளைகளாக சென்னையின் பிள்ளைகளாக இருப்பதால் 383-ம் சென்னை தினம் என்ன? 500, 1000 சென்னை தினங்கள் கொண்டாடினாலும் இந்த ஊர் அப்போதும் அரவணைத்துக் கொள்ளும் மாபெரும் சக்தியாக வளர்ந்து கொண்டே தான் இருக்கும்...

 

 

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.