Skip to main content

ஆர்.எஸ்.எஸ், குற்றவாளி, தற்போது இரண்டாம் முறையாக முதல்வர்....

Published on 17/05/2018 | Edited on 17/05/2018

பி.எஸ் எடியூரப்பா  தொடக்க காலங்களிலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்து அதில் ஒரு பெரும் பதவியை பிடித்தவர். 1980 ஆம் ஆண்டில் ஸ்ரீகரிபுரா தாலூகாவின் பாஜக தலைவராகினார். 1985 ஆம் ஆண்டு ஷிமோகாரா மாவட்டத்தின் பாஜக தலைவராகினார். 1988 ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தின் தலைவராகினார். 1994 ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத்தின் எதிர்கட்சித்தலைவராக இருந்துள்ளார். 1999 ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான போட்டியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார், இருந்தாலும் பாஜக தலைமை அவருக்கு எம்எல்சி பதவியை அளித்தது.  2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டணியினால் எதிர் கட்சி தலைவராக இருந்தார்.
 

yeddy

 

 

முதன்முதலில் கர்நாடக அரசியலில் இவரது பலத்தை காட்டியது, குமாரசாமி தலைமையில் மக்கள் ஜனதா தள அமைச்சர்கள் காங்கிரசுடன் இருந்த கூட்டணியை தவிர்த்துவிட்டு வெளியேறினர். ஆட்சி குழப்பம் ஏற்பட்டது. அப்போதுதான் எடியூரப்பாவுடன் தன்னை இணைத்துக்கொண்டார் குமாரசாமி. இரண்டு வருடத்தில் இவர்கள் கையில் ஆட்சி அமைக்கப்பட்டது. குமாரசாமிக்கு மட்டும் முதலமைச்சர் பொறுப்பு கொடுக்கப்படாமல், இருவருக்கும் 20 மாதங்கள் என்று எடியூரப்பா தரப்பில் பேசப்பட்டது. அக்ரிமெண்டும் போடப்பட்டது. முதல் இருபது மாதங்கள் குமாரசாமிக்கும் அடுத்த இருபது மாதங்கள் எடியூரப்பாவுக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. முதலில் இருபது மாதங்கள் நன்றாக ஆட்சியமைத்துவிட்டு குமாரசாமி முதல்வர் பதவியை எடியூரப்பாவுக்கு தர மறுத்தார். எடியூரப்பா கொஞ்சமும் சிரமம் இல்லாமல், இவர்களுடன் இருந்த ஆதரவை முறித்துக்கொண்டு விலகினார். இரண்டு மாதங்கள் கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சி வந்து அவர்களை நோகடித்தது.
 

 

yeddy with kumarasamy

 

 


பின்னர், எடியூரப்பாவையே 2007 ஆம் ஆண்டில் முதலமைச்சராக பதவியேற்க அழைப்பு வந்தது, பதவியேற்றார். 2008 ஆம் ஆண்டில் ஸ்ரீகரிபுரா தொகுதியில் முன்னாள் முதல்வர் பங்காரப்பாவை எதிர்த்து போட்டியிட்டார். பங்காரப்பாவுக்கு எல்லா தரப்பு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தது. அப்படி இருந்தபோதும் எடியூரப்பா 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2008 ஆம் ஆண்டின் முதலமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கிருந்துதான் இவரின் அரசியல் கெடுபிடி காலங்கள் ஏற்படத் தொடங்கின, பெங்களூர் மற்றும் ஷிமோகா போன்ற ஊர்களில் பல நில மோசடிகளும், சட்டவிரோதமான இரும்பு கம்பிகள் ஏற்றுமதி, சுரங்க ஊழல் போன்ற பல வழக்குகள் இவர்மேல் கர்நாடக லோக்ஆயுத் கமிஷன் முன் வைத்தனர். பாஜக மேலிடத்தில் இருந்து இவரை விலக சொல்லி அழுத்தம் அதிகரித்தது. முதலில் ராஜினாமா செய்யப்பட்டார் பின்னர் கட்சியைவிட்டு விலகினார். 15 அக்டோபர் காவலர்களால் கைது செய்யப்பட்டார். 23 நாட்கள் சிறைவாசம் கழித்து, அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர் 2012 ஆம் ஆண்டு கர்நாடகா ஜனதா பக்ஷா என்ற கட்சியை தொடங்கினார். 2013 ஆம் ஆண்டும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2014 ஆம் ஆண்டு மீண்டும் பாஜகவுடன் அவர் இணைந்தார், கட்சியையும் சேர்த்துதான். 2015 ஆம் ஆண்டு ஆளுநர் வஜூபாய் வாலாவால் மீண்டும் இவரது வழக்குகள் சரி பார்க்கப்பட்டு, பழைய வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.  2016 ஆம் ஆண்டு கர்நாடக பாஜகவின் தலைவராகினார்.
 

yeddy with modi

 

 


2018 ஆம் ஆண்டு, இந்த சர்ச்சையான சூழலில் அவசர அவசரமாக கர்நாடக முதல்வராக பதவிப்பிரமாணம், ஆளுநர் தலைமையில் எடுத்துக்கொண்டார். உடனடியாக ஒரு லட்சம் வரையிலான விவசாய கடன் ரத்து என்று முழு முதல்வரைப்போல அறிவித்துவிட்டார். இன்னும் 15 நாட்களே இருக்கிறது பெருபான்மையை நிரூபிக்க. அதற்குள் இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகள் பாஜகவை எதிர்த்து நியாயம் கேட்க வெற்றி நடைபோட உள்ளனர் பார்ப்போம் என்ன நடக்கிறது என்று...

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.