Skip to main content

அன்றே சொன்ன நக்கீரன்; வெளிவரும் அண்ணாமலை ‘ஹனி ட்ராப்’ இரகசியங்கள்! 

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

Annamalai video strategy

 

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பெண்களை வைத்து ஆண்களை வலையில் வீழ்த்தும் ஹனி ட்ராப் வீடியோக்களை உருவாக்குகிறார். இதற்கு மத்திய அமைச்சரான முருகன் துணை புரிந்தார் என கே.டி.ராகவன் ஆபாச வீடியோ வரும்போதே 'முருகன் உருவாக்கிய வீடியோ' எனத் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது நக்கீரன்.

 

அந்த ஹனி ட்ராப் வீடியோக்கள் இப்பொழுது எதிர்ப்புறமாகச் சுழன்று அதை உருவாக்கிய அண்ணாமலையைப் பதம் பார்த்துள்ளது என்கிறார்கள் சமீபத்தில் பா.ஜ.க. பற்றி ஊடகங்களில் வெளியான வீடியோக்களைப் பற்றி பேசும் பா.ஜ.க. தொண்டர்கள். கே.டி.ராகவனுக்கும், செம்பாக்கம் வேதா என்கிற காஞ்சி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். பிரமுகருக்கும் இடையே கட்சிப் பதவிகள் வழங்குவதில் பிரச்சனை இருந்தது. கே.டி.ராகவன் ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞரின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தார். செம்பாக்கம் வேதா, அந்த வழக்கறிஞர் மற்றும் முருகனால் கட்சிக்குள் கொண்டுவரப்பட்ட சென்னை மாநகர வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மற்றும் முருகன் ஆகியோர் இணைந்து கே.டி. ராகவனை ஹனி ட்ராப் செய்ய முடிவெடுத்தார்கள்.

 

இந்த ஹனி ட்ராப் என்பது கர்நாடக அரசியலில் கடைப்பிடிக்கக்கூடிய டெக்னிக். எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபொழுது அவருக்கு எதிராகச் செயல்பட்ட எட்டு அமைச்சர்களை ஒரு சமூக சேவகர் மூலம் ஹனி ட்ராப்பில் சிக்க வைத்தார் அடுத்த முதல்வர் பதவிக்கு தான் வரவேண்டும் என ஆசைப்பட்ட பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் பி.எல். சந்தோஷ். கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த ஹனி ட்ராப் வேலைகளை பி.எல்.சந்தோஷுக்காக செய்து கொடுத்தது அப்போது கர்நாடகத்தில் போலீஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை. அண்ணாமலை தமிழ்நாடு பா.ஜ.க. துணைத் தலைவராகவும், முருகன் மாநிலத் தலைவராகவும் இருந்த காலகட்டத்தில்... பா.ஜ.க.வின் தேசிய முகமாக அறியப்பட்டவர் கே.டி.ராகவன். அவரை அரசியலில் இருந்து காலி செய்யத் திட்டமிட்ட அண்ணாமலையும் முருகனும் சேர்ந்து கே.டி.ராகவனை பெண்களிடம் வீடியோ காலில் பேச வைக்க ஒரு திட்டம் தீட்டினார்கள். அதை, முருகனுக்கு நெருக்கமான கே.டி.ராகவனால் பழிவாங்கப்பட்ட ஒரு வழக்கறிஞரை வைத்து செம்பாக்கம் வேதா மூலம் ஒரு பெண்ணைப் பிடித்து தூண்டில் போட்டு அரங்கேற்றினார்கள்.

 

அதை வெற்றிகரமாக அவர்கள் அரங்கேற்றியதும் பி.எல்.சந்தோஷ் களத்திற்கு வந்தார். கே.டி.ராகவனின் ராஜினாமா கடிதம் பெறப்பட்டது. அண்ணாமலை, பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரானார். அத்துடன் ஹனி ட்ராப் விசயங்கள் நின்றுவிடவில்லை. அப்பொழுது பா.ஜ.க.வின் பிரபலமாக இருந்த கேசவ விநாயகம் போன்ற பதினைந்து தலைவர்களின் வீடியோக்கள் இருக்கிறது என்று, இந்த வீடியோக்களை வழக்கறிஞர் உதவியுடன் எடுத்த டீம் அறிவித்தது. ஒட்டுமொத்த பா.ஜ.க.வுமே இன்றுவரை அண்ணாமலைக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பது எங்கே தங்களது லீலைகளை வீடியோக்கள் வடிவில் அண்ணாமலை வெளியிட்டு விடுவாரோ என்கிற பயத்தில்தான் என்கிற பா.ஜ.க.வினர், அந்த வீடியோக்கள் என் வசம்தான் இருக்கின்றது என அண்ணாமலை பிளாக்மெயில் செய்து வந்த கட்சியின் அவல நிலையை விளக்குகிறார்கள்.

 

சமீபத்தில் தினேஷ்ரோடி என்பவர் எடப்பாடியின் உருவ பொம்மையை கோவில்பட்டியில் எரித்தார். அண்ணாமலையின் ரகசிய ஆபரேஷன்களில் பங்குபெற்று அமர்பிரசாத் ரெட்டியுடன் சேர்ந்து அண்ணாமலைக்கு பணம் வசூல் செய்து கொடுத்த தினேஷ்ரோடிக்கு எதிராக எடப்பாடி அமித்ஷாவிடமும், நட்டாவிடமும் புகார் செய்தார். இது முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அண்ணாமலையின் கூட்டுச் செயல் என எடப்பாடி சொன்னதைக் கேட்டு டென்ஷனான அமித்ஷா, எடப்பாடிக்கு எதிராக எதுவும் செய்யக்கூடாது என உத்தரவிட்டார். அதனால் கேசவவிநாயகம், தினேஷ்ரோடியை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். தினேஷ் ரோடி, அண்ணாமலையிடம் "என்னை நீக்கினால் நீங்கள் செய்த செயல்களை எல்லாம் பிரஸ்மீட் வைத்து சொல்வேன்'' என மிரட்ட, நீக்கப்பட்ட தினேஷ்ரோடி மறுநாளே மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார்.

 

இந்நிலையில் பா.ஜ.க.வில் மத்திய அரசு நிறுவனங்களுக்கு டைரக்டர்களை நியமிக்கும் பணி தொடங்கியது. புதுக்கோட்டையைச் சேர்ந்த கோவர்த்தன் மற்றும் ஆர்.ஜே.ஆனந்த் ஆகியோர் டைரக்டர்களாக நியமிக்கப்பட்டார்கள். இதில் கோவர்த்தன் மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஆர்.ஜே.ஆனந்த் மீதும் பல்வேறு விதமான புகார்கள் உள்ளன. இதில் கோவர்த்தன் முக்கியத் தலைவரான கேசவவிநாயகத்துக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் செலவில் வீடு வாங்கிக் கொடுத்ததாக புகார் எழுந்தது. அதே போல தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர் செந்தில் என்பவர் போலி நிதி நிறுவனங்களிடம் அண்ணாமலை டீம் வசூலிக்கும் பணத்தில் கோடிக் கணக்கில் லஞ்சம் பெறுகிறார். ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கொள்கை, சித்தாந்தம் போன்றவற்றைப் பேசுவார்கள். பணம் வாங்க மாட்டார்கள் என்கிற பிரச்சாரங்களை மீறி, செந்தில் வாங்கிக் கொடுத்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் பெரும் புகாராக எழுந்தது.

 

அதற்குப் பதிலளித்த அண்ணாமலை டீம், ஆர்.எஸ்.எஸ். செந்தில் மட்டுமா பணம் வாங்குகிறார். ஆர்.எஸ்.எஸ்.ஸிலிருந்து வந்த பி.எல்.சந்தோஷும் எங்களிடம் பணம் வாங்குகிறார் என கட்சிக்குள்ளேயே தம்பட்டம் அடித்தது. இப்படி புகார் மீது புகார் ஒருபக்கம் எழ, மறுபக்கம் ஊடகவியலாளர்களை ‘செட்டப்’ செய்து பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அண்ணாமலை கருத்துக்களை உருவாக்குகிறார். அதில் தி.மு.க.வை மிக மோசமாக சமூக வலைத்தளங்களில் அவதூறு செய்தி பரப்புகிறார் என்கிற விசயமும் வெளிவந்தது. இதையெல்லாம் முன்கூட்டியே கணித்த மாநில அரசின் உளவுப்பிரிவுத் தலைவர் டேவிட்சன் தேவாசீர்வாதம், அவருக்கு நெருக்கமான ஊடகவியலாளர்கள் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் சிலரை வைத்து, அண்ணாமலைக்கு நெருக்கமான அமர்பிரசாத் ரெட்டியிடம் பேச வைத்தார்.

 

ஆர்.எஸ்.எஸ். செந்தில், அண்ணாமலை உட்பட பலரும் இப்படியெல்லாம் லஞ்சம் வாங்குகிறார்கள் என போட்டுடைத்ததோடு, பா.ஜ.க.வில் கொலைக் குற்றவாளிகளைக் கூட எப்படிச் சேர்க்கிறார்கள் என அந்த வீடியோவில் உளறிக்கொட்டினார். அத்துடன், ஊடகவியலாளர்களை ஒரு மது விருந்தில் சந்திக்க வைத்து சமூக வலைத்தளங்களில் எப்படி பா.ஜ.க.வுக்கு ஆதரவான கருத்துக்கள் பணம் கொடுத்து உருவாக்கப்படுகிறது என்பதை விவரிக்க வைத்தார். பா.ஜ.க.வின் ஒட்டுமொத்த அமைப்பும் அண்ணாமலையின் கிரிமினல் மூளையால்தான் இயக்கப்படுகிறது என புதிதாக வெளிவந்த வீடியோக்கள் தெளிவாக உணர்த்துகிறது. இவை அனைத்துமே ஏற்கெனவே நக்கீரனில் செய்தியாக வெளிவந்த விவகாரங்கள்தான். வெளியான புதிய வீடியோக்கள், எங்கே தங்களது ஆபாச வீடியோக்களையும் அண்ணாமலை வெளியிட்டு விடுவாரோ என பயந்துகொண்டிருந்த பா.ஜ.க. தலைவர்களை பேச வைத்துள்ளது. அண்ணாமலையை நீக்கிவிட்டு த.மா.கா. தலைவரான ஜி.கே.வாசனை பா.ஜ.க. தலைவராக்க பிரதமர் மோடிக்கு நெருக்கமான தொழிலதிபர் அதானியும், பியூஸ் கோயலும் சில பத்திரிகையாளர்களும் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

 

கிரிமினல் வேலைகளும் கட்டிங் வாங்குவதும் பா.ஜ.க.வின் கொள்கையாகிவிட்டது என்கிற அலறல் பா.ஜ.க.வில் வலுவாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. அன்று கே.டி.ராகவனுக்காக அண்ணாமலை கூர் தீட்டிய ஹனி ட்ராப் கத்தி, பூமராங் போல திரும்பி வந்து அண்ணாமலையையே பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அடுத்து எந்த வீடியோ வரும்? என்ன நடக்கும்?

 

 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.