Skip to main content

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டும்; கைதுக்கான முழு விபரமும்

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

Allegation against Minister Senthil Balaji; Full details of the arrest

 

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகரான செந்தில் பாலாஜி, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர். அப்போது, போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் எஞ்சினியர்களை பணி நியமனம் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதையை, போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும் புகார் சொல்லப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர், இவர் தினகரன் தலைமையிலான அமமுகவில் சில காலம் பணியாற்றினார். பின்னர், அப்போதைய எதிர்க்கட்சியான திமுகவில் இணைந்து பணியாற்றினார்.

 

இதையடுத்து, சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதும், மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இதன் பின்னர், தமிழக பாஜகவுக்கு எதிரான கருத்துகளை மிகவும் ஆணித்தரமாகப் பேசத் தொடங்கினார். சமீபத்தில் கூட, ரஃபேல் வாட்ச் பில் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இவருக்கும் நடந்த வாதப்பிரதிவாதம் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அப்போது மின்சாரம் தடைப்பட்டது. இது வேண்டுமென்றே செந்தில் பாலாஜிதான் செய்தார் எனக் கூறி பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

Allegation against Minister Senthil Balaji; Full details of the arrest

 

பின்னர் இதுகுறித்து விளக்கமளித்த மின்துறை அதிகாரிகள், போரூர் துணை மின் நிலைய உயர்மின் அழுத்தப் பாதையில் மின் துண்டிப்பு ஏற்பட்டதே மின் இணைப்பு தடைப்பட்டதற்கு காரணம் என விளக்கமளித்தனர். இருப்பினும், இதனால் அமித்ஷா கடும் ஆவேசமடைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கடந்த மே 26 ஆம் தேதி, கரூர், கோவை, சென்னை போன்ற பகுதிகளில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் நடத்தி வந்த சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. 

 

Allegation against Minister Senthil Balaji; Full details of the arrest

 

ஏற்கனவே, அமைச்சரின் வீட்டில் ரெய்டு நடந்த சலசலப்பு அடங்குவதற்குள், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர். அதேபோல, ஜூன் 13 ஆம் தேதி காலை 8.30 மணி அளவில், ஆயுதம் ஏந்திய போலீசாருடன் வீட்டின் உள்ளே வந்த அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 5 வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதுவரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் இல்லத்தில் ரெய்டு நடத்திய அதிகாரிகள், இப்போது நேரடியாக செந்தில் பாலஜியின் வீட்டிற்கே சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். 

 

Allegation against Minister Senthil Balaji; Full details of the arrest

 

அதேபோல, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறைக்கே சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த அதிமுக ஆட்சியில், தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Allegation against Minister Senthil Balaji; Full details of the arrest

 

முன்னதாக, ரெய்டுக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய பாதுகாப்பு படை வீரர்களுடன் வந்திருந்தனர். அதிகாரிகளை மட்டும் அனுமதித்த தமிழக போலீஸ், முறைப்படி துணை ராணுவப்படை அதிகாரிகளை உள்ளே நுழைய அனுமதிக்க முடியாது எனக் கூறி, தலைமைச் செயலகத்தின் 6 ஆம் எண் நுழைவு வாயிலிலேயே அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் வாசலிலேயே காத்திருந்தனர். 

 

மேலும், வங்கி பணப் பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக, எஸ்.பி.ஐ. வங்கி அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதிகாலை நேரத்தில் வாக்கிங் செல்வதற்காக வெளியே சென்றிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, செய்தியறிந்து அவசர அவசரமாக வீட்டுக்கு விரைந்துள்ளார். அப்போது அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம், அமலாக்கதுறையின் இந்த திடீர் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் எனவும் கூறியுள்ளார். 

 

Allegation against Minister Senthil Balaji; Full details of the arrest

 

இதேபோன்று, சென்னை அபிராமபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திப்பதற்காக முன்னாள் அமைச்சர் ஆர்.எஸ். பாரதி மற்றும் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் ஆகியோர் சென்றுள்ளனர். ஆனால் அவர்களை துணை ராணுவப் படையினர், வீட்டின் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அந்தப் பகுதி மேலும் சில மணி நேரம் பரபரப்பானது. 

 

Allegation against Minister Senthil Balaji; Full details of the arrest

 

அதனைத் தொடந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.எஸ். பாரதி ஒன்றிய அரசின் மீது கடும் கண்டனங்களைத் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து, ‘முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை புறவாசல் வழியாக அச்சுறுத்த நினைக்கிறது பாஜக’ எனக் கடுமையாக சாடியுள்ளார். இதற்கெல்லாம் திமுக அரசு ஒருபோதும் அச்சப்படப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.  

 

Allegation against Minister Senthil Balaji; Full details of the arrest

 

சுமார் 18 மணி நேரமாக நடைபெற்று வந்த சோதனையின் இறுதியில், அவர் விசாரணைக்காக நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனாலும், அவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்பது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

 

Allegation against Minister Senthil Balaji; Full details of the arrest

 

இதற்கிடையில், செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. அப்போது.. ஐயோ.. என நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கதறிய செந்தில் பாலாஜி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நள்ளிரவு 2.15 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். அவரைத் தமிழக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, ரகுபதி, கே.என்.நேரு மற்றும் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் போய்ச் சந்தித்துள்ளனர். செந்தில் பாலாஜியின் காது பகுதியில் வீக்கம் இருப்பதாகவும் அவர் சுயநினைவில்லாமல் இருக்கிறார் என்றும் நான்கைந்து முறை அழைத்தும் அவர் கண்களை திறக்கவில்லை என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தார்.

 

Allegation against Minister Senthil Balaji; Full details of the arrest

 

இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் சந்தித்தார். செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அங்கிருந்தபடியே அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், செந்தில் பாலஜியின் மனைவி மேனகா, சென்னை நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


எதிர்க்கட்சிகளை தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைக்கும் திமுகவை மிரட்டுவதற்காகவே இதுபோன்ற ரெய்டுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அடுத்தடுத்து அரங்கேறியுள்ள சம்பவம் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.

 

 

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.