Skip to main content

ரோஹித் ஷர்மா கேப்டன் ஆகும் நேரம் வந்துவிட்டது- வைரலாகும் முன்னாள் இந்திய அணி வீரரின் ட்வீட்...

Published on 13/07/2019 | Edited on 13/07/2019

உலகக்கோப்பை தொடரில் நடந்த அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வியடைந்து இந்திய அணி தொடரை விட்டு வெளியேறியது.

 

wasim jaffer about handing over the indian captaicy to rohit sharma

 

 

இந்த தோல்விக்கான காரணங்களாக பல கூறப்பட்டாலும் கோலி மற்றும் ரவி சாஸ்திரியின் பல தனிப்பட்ட முடிவுகளும் இதற்கு காரணம் என குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் செய்துள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் தோல்வி குறித்து பதிவிட்ட அவர், "இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டதா?, 2023-ம் ஆண்டு உலகக்கோப்பையில்  ரோஹித் சர்மா இந்திய அணியை வழிநடத்த நான் விரும்புகிறேன் " எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தோல்விக்கு பிறகு, அணியில் உள்ள வீரர்கள் கோலிக்கும், ரோஹித் ஷர்மாவுக்கும் ஆதரவாக இரண்டாக பிரிந்துள்ளதாக பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், ஜாபரின் இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.