Skip to main content

ராகுல், க்ருனால் பாண்டியா அதிரடி! -  வலுவான ஸ்கோரை எட்டிய இந்தியா!

Published on 23/03/2021 | Edited on 23/03/2021

 

K PANDYA KL RAHUL

 

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி, புனேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ரோகித்-தவான் இணை பொறுமையாக ரன்களை சேர்த்தது. ரோகித் சர்மா 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து தவான் - விராட் இருவரும் இணைந்து ரன்களை சேர்த்தனர்.

 

விராட் அரைசதமடித்து ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய தவான், துரதிருஷ்டவசமாக 98 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். ஒருபக்கம் கே.எல் ராகுல் அதிரடியாக ஆட மறுபக்கம் ஸ்ரேயஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய க்ருனால் பாண்டியா, அதிரடியாக ஆடி ரன்களை உயர்த்தினார்.

 

கே.எல் ராகுல் மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், இந்திய அணி ஐம்பது ஓவர் முடிவில் 317 ரன்களை குவித்தது. க்ருனால் பாண்டியா 31 பந்துகளில் 58 ரன்களோடும், கே.எல் ராகுல் 43 பந்துகளில் 62 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

 

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

பஞ்சாபில் இணைய சேவைகள் முடக்கம்

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

Internet services cut in Punjab

 

பஞ்சாபில் 24 மணி நேரத்திற்கு இணைய சேவைகள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பஞ்சாப் மாநிலத்தில், பஞ்சாபை பிரித்து  தனி நாடாக அறிவிக்க கோரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பாக செயல்பட்டு வரும் 'வாரிஸ் பஞ்சாப் டி'  அமைப்பின் தலைவராக உள்ள அம்ரித் பால் சிங் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு ஏற்படும் பதற்றத்தை தணிப்பதற்காக  இன்று பகல் 12 மணி முதல் நாளை பகல் 12 மணி வரை என 24 மணி நேரத்திற்கு இணைய சேவை முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இருப்பினும் அத்தியாவசிய தேவையான தொலைப்பேசி அழைப்புகள், வங்கிக்கான குறுஞ்செய்தி வசதிகளில் எவ்வித தடையும் இன்றி தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.