Skip to main content

இன்னும் கோலி கேப்டனாக இருப்பது அவரின் அதிர்ஷ்டம்...!

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

தோனி, ரோஹித் சர்மா ஆகியோருடன் ஒப்பிடுகையில் கோலி கேப்டன்ஷிப்பில் இன்னும் வெகு தூரம் கடக்க வேண்டியுள்ளது. தோனி, சர்மா ஆகியோர் 3 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளனர். 2013-ஆம் ஆண்டு முதல் ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக உள்ள கோலி இன்னும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. இருந்தாலும் ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அவரை கேப்டன் பதவியிலிருந்து விலக்காமல் வைத்துள்ளது. இதற்காக கோலி பெங்களூர் அணி நிர்வாகத்திற்கு நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான கம்பீர் கோலியின் கேப்டன்ஷிப் பற்றி விமர்சித்துள்ளார். 

 

csk

 

ஐ.பி.எல். தொடரில் தோனிக்கு அடுத்தபடியாக கேப்டன்ஷிப்பில் சிறந்து விளங்கியவர்கள் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா. கம்பீர் தலைமையில் இரண்டு முறை கொல்கத்தா அணி கோப்பையை வென்றுள்ளது. கேப்டன்ஷிப்பில் வீரர்களை பயன்படுத்தும் முறையில் கோலி சரியாக செயல்படாமல் இருந்து வருகிறார். டி வில்லியர்ஸ், கெயில், வாட்சன் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தும் ஒருமுறைகூட கோலி தலைமையில் ஆர்.சி.பி. அணி கோப்பையை வெல்லவில்லை. 
 

கோலி பெங்களூர் அணியை வழிநடத்துவதற்கு முன்பு 5 தொடர்களில் 3 முறை ப்ளே ஃஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. அதில் 2 முறை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது. ஐ.பி.எல். தொடரில் கடந்த 6 ஆண்டுகள் ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் கோலி. இதில் இரண்டு முறை மட்டுமே ப்ளே ஃஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஒருமுறை இறுதிப்போட்டிக்கு சென்று தோல்வியடைந்துள்ளது. கோலி தலைமையில் ஆர்.சி.பி.அணி 96 போட்டிகளில் 44 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் கோலியின் கேப்டன்ஷிப் மீதான விமர்சனம் அதிகமாக உள்ளது. 

 

virat

 

உலகக்கோப்பை தொடரில் நான்காவது வரிசை வீரராக ராயுடு ஒருவழியாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியா  தொடரில் சொதப்பியதால் அந்த இடத்தில் யாரை களமிறக்குவது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யாமல் உள்ளது இந்திய அணி நிர்வாகம். இந்த நிலையில் கோலி மற்றும் ரவி சாஸ்திரியின் செயல்பாடுகளை கடுமையாக சாடியுள்ளார் கம்பீர். 
 

தோனி, தவான் ஆகியோர் ஒரு வருடமாக ஃபார்மில் இல்லாதபோது ஃபார்முக்கு வரும் வரை அவரை அணியில் விளையாட வைத்தனர். ஆனால் ராயுடு கடந்த ஒரு தொடரில் மட்டுமே சொதப்பியதால் அவருக்கு அடுத்த வாய்ப்பு தராமல் பாரபட்சம் காட்டுகிறது அணி நிர்வாகம். ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பு வரை சிறப்பாக விளையாடி வந்தார் ராயுடு. ராயுடுவிற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்ற வீரர்களுக்கு ஏன் எடுக்கப்படவில்லை என்றும் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் பாரபட்சம் காட்டுவதாகவும் கம்பீர் தெரிவித்துள்ளார்.

 

virat

 

இந்திய அணியின் பாதி கேப்டன் தோனி தான். மீதிதான் கோலி. தோனி தான் அணியை வழிநடத்தி, கிட்டத்தட்ட இந்திய அணியின் பாதி கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி சமீபத்தில் கூறியிருந்தார்.
 

தோனி விளையாடும் போட்டிகளில் கடைசி டெத் ஓவர்களில் பீல்டிங் அமைக்கும் பொறுப்பை தோனியிடம் கொடுத்துவிட்டு, பவுண்டரி லைனில் பீல்டிங் நிற்கிறார் கோலி. தோனி ஸ்டம்பிற்கு பின்னால் நிற்பதால், அவர் எதிரணியின் வியூகங்களை எளிதாக புரிந்து கொள்கிறார். தோனி இருப்பதால் கோலிக்கு பெரிய நெருக்கடி இல்லை. கோலிக்கும் தோனிக்கும் இடையிலான புரிந்துணர்வு, சரியான முடிவை எடுக்க உதவுகிறது என்று கும்ப்ளே குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Next Story

6 நிமிடங்களில் 50 ரன்கள்! அதிசயிக்க வைத்த ஆர்.சி.பி.வீரர்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
50 runs in six minutes! Amazing RCB player will jacks

ஆறு நிமிடங்களில் 50 ரன்கள் அடித்து ஆர்.சி.பி.வீரர் ஒருவர் அதிரடியில் அதிசயிக்க வைத்துள்ளது சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

ஐபிஎல் 2024இன் 45ஆவது லீக் ஆட்டம் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நேற்றிய போட்டி முத்ற்கொண்ட், இனி ஆடும் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால்தான் பிளே ஆஃப் வாய்ப்பில் கொஞ்சமாவது நிலைத்திருக்க முடியும் என்பதால் பெங்களூரு அணிக்கு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. குஜராத் அணியும் வெற்றி பெற்றால்தான் பிளே ஆஃப் வாய்ப்பு வலுப்பெறும் என்பதால் ஆரம்பம் முதலே விறுவிறுப்பு தொடங்கியது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. சஹா, கில் இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த தமிழ்நாட்டு வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் ஷாருக்கான் ஆகியோரின் பொறுப்பான அதே நேரத்தில் அதிரடியான பேட்டிங்கால் குஜராத் அணி சரிவில் இருந்து மீண்டது. அதிரடியாக ஆடிய ஷாருக்கான் ஐபிஎல்-இல் தனது முதலாவது அரை சதத்தை பதிவு செய்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மில்லர் வழக்கம் போல அதிரடியாக 26 ரன்கள் எடுக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக ஆடிய சுதர்சன் அரைசதம் கடந்து 84 ரன்கள் குவித்தார். குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. சிராஜ், ஸ்வப்னில் சிங், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 201 ரன்கள் என்பது கடின இலக்கு போலத் தோன்றினாலும், எல்லா ஆட்டங்களிலும் எளிதில் அடிக்கப்படுவதால் நம்பிக்கையுடன் பெங்களூரு அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய பெங்களூரு அணிக்கு டு பிளசிஸ் நல்ல தொடக்கம் கொடுத்து 24 ரன்களில் வழக்கம் போல நடையைக் கட்டினார். எப்போதும் போல பொறுப்புடன் ஆடிய கோலியுடன் அதிரடி வீரர் வில் ஜேக்ஸ் இணைந்தார். குஜராத் அணியின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபக்கமும் சிதறடித்தார்.

50 runs in six minutes! Amazing RCB player will jacks

கோலி அரைசதம் கடந்து 70 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் நின்றார். மறுபுறம் வில் ஜேக்ஸ் 31 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அடுத்த ஆறு நிமிடங்களில் 50 ரன்கள் எடுத்து 41 பந்துகளில் சதமடித்தார். இதில் 10 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல்-இல் இது 5ஆவது அதிவேக சதமாகும். மாலை 6.41 க்கு அரை சதம் கடந்த வில் ஜேக்ஸ் 6.47 க்கு சதம் கடந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக ஆர்.சி.பியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அவர்கள் வெளியிட்ட பதிவும் வைரலாகி வருகிறது.  

Next Story

ட்விஸ்ட் இருக்கு... சன் ரைசர்ஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த ராயல் சேலஞ்சர்ஸ்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
There is a twist Royal Challengers rocking performance against Sunrisers!

ஐபிஎல் 2024இன் 41 ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று (ஏப்.25) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆர்சிபி, அனுபவ கோலி, டு பிளசிஸ் இணை ஹைதராபாத் பந்து வீச்சை ஆரம்பத்திலேயே ஆட்டம் காண வைத்தது. அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த டு பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வில் ஜேக்ஸும் 6 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து வந்த பட்டிதார், கோலியுடன் இணைந்து அசர வைக்கும் விதத்தில் ஆடினார். மார்கண்டேவின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்கள் அடித்து ஹைதராபாத் பவுலர்களை திகைக்க வைத்தார். 20 பந்துகளில் அரை சதம் அடித்து 50 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலியும் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். க்ரீனின் 20 பந்துகளுக்கு 37 எனும் கடைசி கட்ட அதிரடி கை கொடுக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. சிறப்பாக பந்து வீசிய உனாத்கட் 3 விக்கெட்டுகளும், நடராஜன் 2 விக்கெட்டுகளும், மார்கண்டே, கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 207 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்தியது. கடந்த சில போட்டிகளாக அதிரடியாக ஆடி ரன்கள் குவித்து வரும் ஹைதராபாத் அணி இந்த இலக்கை எளிதில் அடித்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க, முதல் ஓவரிலேயே ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டு பிளசிஸ் தைரியமாக முதல் ஓவரை ஸ்பின்னரான வில் ஜேக்ஸுக்கு கொடுக்க, சிக்சர்கள் பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், ட்விஸ்ட் நடந்தது. தொடர்ச்சியான அதிரடி ஆட்டத்தால் எதிரணிகளை மிரட்டி வந்த ஹெட் 1 ரன்னில் அவுட் ஆனார்.

There is a twist Royal Challengers rocking performance against Sunrisers!

பின்னர் சிறிது அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா 31 ரன்களில் வெளியேறினார். அடுத்து ஸ்வப்னில் சிங் சுழலில் மார்க்ரம் 7, கிளாசென் 4 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நித்திஷ் ரெட்டியும் 13 ரன்களில் கரன் ஷர்மா பந்தில் போல்டு ஆனார். அடுத்து வந்த அப்துல் சமத்தும், கரன் ஷர்மா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

85-6 என்ற இக்கட்டான சூழலில் கேப்டன் கம்மின்ஸ் களமிறங்கினார். அவருடன் இணைந்து சபாஸ் அஹமதுவும் இணைந்து எவ்வளவோ முயன்றும் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. கம்மின்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி வரை களத்தில் நின்ற சபாஸ் அஹமது 40 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணியால் 171 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்து வீசிய ஸ்வப்னில் சிங், கரன் ஷர்மா, க்ரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், யாஸ் தயால், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். அட்டகாசமாக ஆடி 20 பந்துகளில் அரை சதம் அடித்த பட்டிதார் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் 4 புள்ளிகள் பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.

இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று மற்ற அணிகளின் ஆட்டங்களின் முடிவைப் பொறுத்து பெங்களூரு அணிக்கு கொஞ்சம் பிளே ஆஃப் வாய்ப்பு எஞ்சியுள்ளது. அதனால் இந்த வெற்றியானது 6 ஆட்டங்களாக தொடர் தோல்விகளால் துவண்டிருந்த பெங்களூரு அணிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.