Skip to main content

அசைவத்தில் மீன் என்றால்  ஓகே ….

Published on 04/02/2019 | Edited on 04/02/2019

கொஞ்ச நாட்களுக்கு முன்பு அணைத்து ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் பெரிதும் பேசப் பட்டது அசைவ உணவுகளில் கலப்பிடம் செய்கிறார்கள் அதாவது மட்டனில் நாய் கறியும் ,சிக்கனில் பூனைக் கறியும் கலப்பதாக செய்திகள் வந்தது .இதனால் மக்கள் அனைவரும் இறைச்சி கடைகளிலும் ,அசைவ உணவு ஹோட்டலிலும் மக்கள் செல்வது பெரும் அளவுக்கு குறைந்தது.இருந்தாலும் அசைவ உணவு பிரியர்களுக்கு அசைவ உணவில் என்ன சாப்பிடலாம் என்று யோசித்த போது மீனை விரும்பி சாப்பிட்டார்கள்.மீன் சாப்பிடுவதால் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருந்தது .அப்படி என்ன தான் மற்ற  மாமிசங்களுக்கும், மீனுக்கும் வேறுபாடு உள்ளது என்று பார்க்கலாம். அதாவது, மாமிசங்களில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும் கொழுப்பு அமிலங்கள், உடலுக்கு கெடுதலை விளைவிக்கக் கூடியது.  ஆனால், மீன்களில் உள்ள கொழுப்பு அமிலங்கள் நன்மை விளைவிக்கக் கூடியது.  அதாவது, மனித உடலின் வெப்பத்தை விட அதிக வெப்பம் உள்ள விலங்குகளின் கொழுப்பு கெடுதலை விளைவிக்கக் கூடியது எனவும், மனிதஉடலின் வெப்பத்தை விட குறைவான வெப்பம் உள்ள விலங்குகளின் கொழுப்பு நன்மை விளைவிக்கும் என்றும் கூறலாம்.
 

fish food



மாடு, பன்றி அல்லது பறவையின் வெப்பநிலை சாதாரணமாக 101.3 டிகிரி முதல் 104 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும்.  இது மனித உடல் வெப்பநிலை (98.6 டிகிரி பாரன்ஹீட்)யை விட அதிகம்.  கோழியின் வெப்பநிலை அதைவிட அதிகமாக 106.7 டிகிரி பாரன்ஹீட்டாக உள்ளது.  விலங்குகளின் கொழுப்பின் வெப்பநிலை, அதன் உடல் வெப்பநிலைக்கு இணையாகவே இருக்கும்.  எனவே, இந்த விலங்குகளின் வெப்பநிலை, குறைந்த வெப்பநிலை கொண்ட மனிதர்களின் உடலுக்குள் செல்லும்போது, அவை மிகவும் கடுமையானதாக மாறிவிடும்.  இவை ரத்தத்தை தடிமனாக்கிவிடும்.  தடிமனான ரத்தத்தின் ஓட்டம் பாதிக்கப்படும்.  இதனால், ரத்த நாளங்களில் ரத்தம் நின்றுவிடுவதுடன் உறைந்தும் விடும்.
மறுபுறம், மீன்கள் குளுமையான உடலமைப்பு கொண்டவை.  இயல்பான நிலையில், அதன் வெப்பநிலை, மனித உடல் வெப்பநிலையை விட குறைவாகவே இருக்கும்.  மனித உடலுக்குள் மீன் உணவு சென்றால் என்ன மாற்றம் ஏற்படும்?  கொழுப்பை வாணலியில் போட்டு வனக்குவது போல, கொழுப்பு உருகி திரவமாக மாறிவிடும்.  மீன்களில் உள்ள எண்ணெய், மனித ரத்தக் குழாயில் நுழையும்போது, ரத்தம் திரவமாக மாறும், ரத்தத்தில் உள்ள மோசமான கொழுப்புகளின் அளவு குறையும். அசைவ உணவு பிரியர்களில் மீனுக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு இருக்கத் தான் செய்கிறது .
 

Next Story

டன் கணக்கில் பிடிபட்ட போலி இஞ்சி பேஸ்ட்; பொதுமக்களே உஷார்

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Tons of fake ginger paste caught; Public beware

உணவு பொருள்களின் தரம் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள், போலியான கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்த வீடியோக்கள், தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வரும் நிலையில், ஹைதராபாத்தில் டன் கணக்கில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹோட்டல்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் பொருட்கள் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அடிக்கடி திடீர் சோதனையில் ஈடுபட்டு தரம் இல்லாத பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடைகளில் பிரபல நிறுவனங்களின் பெயரில் கிடைக்கும் இஞ்சி பேஸ்ட் போல ஹைதராபாத்தில் சில நபர்கள் பாக்கெட்டுகளில் போலியாக இஞ்சி பேஸ்ட் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சென்ற அதிகாரிகள் அதை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்களின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் என்பது தெரியவந்துள்ளது. உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் செயற்கையான உணவுப் பொருட்கள் மற்றும் வண்ணம், பசை ஆகியவற்றை கலந்து இந்த போலி இஞ்சி பேஸ்ட் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 3 டன் அளவில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஆறு வாரம்தான் டைம்; 134 இறால் பண்ணைகளுக்கு செக்

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Check for 134 shrimp farms; The court gave 6 weeks time

சட்ட விரோதமாகச் செயல்படும் 134 இறால் பண்ணைகளை உடனடியாக அரசு மூட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் சட்ட விரோதமாக அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை மூட வேண்டும் எனப் புகார் எழுந்தது. இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு அங்கு அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை மூட மீன்வளத்துறை உதவி இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இறால் பண்ணை உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, மத்திய அரசின் கடலோர மீன் வளர்ப்பு ஆணைய சட்டத்தின்படி கடலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இறால் பண்ணைகள் அமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் மனுதாரர்கள் அமைத்துள்ள இறால் பண்ணைகள் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ளது. மேலும் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டு வருகிறது. எனவே அந்த பண்ணைகளை மூடுவதற்கு உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2,709 பண்ணைகளில் 2,227 இறால் பண்ணைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டவை. 348 பண்ணைகளின்  விண்ணப்பங்கள் தற்பொழுது வரை நிலுவையில் உள்ளது. 134 இறால் பண்ணைகள் சட்ட விரோதமாக அனுமதி பெறாமல் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, சட்ட விரோதமாகத் தமிழகம் முழுவதும் இயங்கும்  இறால் பண்ணைகளை உடனடியாக மூட வேண்டும். ஆறு வாரத்திற்குள் இந்தப் பணிகளை முடிக்க வேண்டும். அவ்வாறு மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்காத அரசு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.