Skip to main content

குளிர்காலத்தில் இந்த 10 உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது?

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

standar image

 

 

உணவுப் பழக்கத்தைப் பொறுத்தவரை, குளிர்காலத்தில் ஒருவர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், குளிர்காலங்களில் பெரும்பாலும் பல நோய்த்தொற்றுகள் மற்றும் வியாதிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

 

உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கவும் நோய்களிடமிருந்து தற்காத்து கொள்ள குளிர்காலத்தில் சில உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது சிறந்த வழிமுறையாகும்.

 

தயிர் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் என்றாலும் குளிர்காலத்துக்கு உகந்ததல்ல. ஆகையால், குளிர்காலத்தில் தயிர் போன்ற குளிர்ச்சியான உணவுப்பொருட்களை தவிர்ப்பது நல்லது. குளிர்ந்த தயிர் சாப்பிடுவது குளிர் மற்றும் இருமலுக்கு ஆளாகக்கூடும், அதுமட்டுமின்றி மார்புச்சளி இருக்கும் போது உணவில் தயிர் சேர்த்துக்கொண்டால் அது சளியை இறுக வைத்துவிடும்.

 

நீங்கள் தயிர்  பிரியராக இருக்கும் பட்சத்தில், அறை வெப்பநிலையில் மதிய உணவு வேளையில் தயிர் சேர்த்து கொள்ளலாம்.

 

பொதுவாக குளிர்காலத்தில்  குளிர் பானங்கள், சோடாக்கள் மற்றும் மது பானங்கள் பருகுவதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், குளிர் பானங்கள் பருகுவது தொண்டை வலியை அதிகப்படுத்திவிடும். குறிப்பாக மது பானங்கள் பருகினால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, உடல் வறட்சி அதிகரித்து, சளியின் அளவோடு, காய்ச்சலும் அதிகரித்துவிடும்.

 

குளிர்காலத்தில், உங்கள் உடலுறுப்புகள் இரு மடங்கு கடினமாக உழைக்க வேண்டும். முதலில் உணவை உடலின் வெப்பநிலைக்குக் கொண்டு வந்து ஜீரணிக்க வேண்டும்.

 

குளிர்காலத்தில் சூரிய வெளிச்சம் போதிய அளவில் உடலில் படாத காரணத்தால். வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்படும். எனவே, சாப்பிடும் உணவில் வைட்டமின் டி உள்ள முட்டை, பால், மீன், சிக்கன், ஆரஞ்சு பழச்சாறு, உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டு வைட்டமின் டி, பற்றாக்குறையை தவிர்க்கவும்.

 

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் உட்கொள்ளும் பொழுது, குறிப்பாக குளிர்காலத்தில் சில ஒவ்வாமைகளைத் தூண்டும். பதப்படுத்தப்பட்ட உணவை ஜீரணிக்க வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் அதிக நேரம் எடுக்கும்,  இவை செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது. ஆகையால், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை குளிர்காலத்தில் தவிர்ப்பது நல்லது.

 

குறிப்பாக குளிர்காலத்தில், நம் உணவில் மிளகு, பூண்டு, இஞ்சி, சீரகம் போன்றவற்றை சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவதன் மூலம் செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 

இன்றைய நவீன உலகில் பெரும்பாலான உணவகங்களில், அல்லது வீடுகளிலும் கூட சாலடுகள் (பச்சை காய்கறிகள்) வழக்கமாக உட்கொள்ளப்படுகின்றன. பெரும்பாலான ஊட்டச்சத்து நிபுணர்கள், உங்கள் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மதிய உணவின் சாலட் சாப்பிடவும், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களையும் தவிர்க்கவும் பரிந்துரைக்கின்றனர்.

 

இருப்பினும், குளிர்காலங்களில் அவை பெரும்பாலான அஜீரண பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆகையால்,  நீங்கள் உண்ணும் சாலட்டுகளில் (பச்சை காய்கறி) முள்ளங்கி மற்றும் கேரட்டை சேர்த்து, மதியம் 2-3 மணிக்குள் உங்கள் மதிய உணவை  முடிப்பது சிறந்த வழிமுறையாகும்.

 

நீங்கள் இனிப்புகளை அதிகம் விரும்பி சாப்பிடும் நபராக இருக்கும் பட்சத்தில், குளிர்காலங்களின் நீங்கள் இனிப்புகளை எடுத்துக்கொள்ளும் போது சர்க்கரையின் அளவுகளை சரிபார்ப்பது அவசியம்.

 

ஏனெனில், அதிகப்படியான இனிப்பு சில சமயங்களில் நோய் எதிர்ப்பு சக்தியைத் வெகுவாக பாதிக்கும். ஆகையால், குளிர்காலங்களில் குறைந்த அளவு இனிப்பு எடுத்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.

 

 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

டன் கணக்கில் பிடிபட்ட போலி இஞ்சி பேஸ்ட்; பொதுமக்களே உஷார்

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Tons of fake ginger paste caught; Public beware

உணவு பொருள்களின் தரம் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள், போலியான கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்த வீடியோக்கள், தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வரும் நிலையில், ஹைதராபாத்தில் டன் கணக்கில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹோட்டல்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் பொருட்கள் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அடிக்கடி திடீர் சோதனையில் ஈடுபட்டு தரம் இல்லாத பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடைகளில் பிரபல நிறுவனங்களின் பெயரில் கிடைக்கும் இஞ்சி பேஸ்ட் போல ஹைதராபாத்தில் சில நபர்கள் பாக்கெட்டுகளில் போலியாக இஞ்சி பேஸ்ட் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சென்ற அதிகாரிகள் அதை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்களின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் என்பது தெரியவந்துள்ளது. உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் செயற்கையான உணவுப் பொருட்கள் மற்றும் வண்ணம், பசை ஆகியவற்றை கலந்து இந்த போலி இஞ்சி பேஸ்ட் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 3 டன் அளவில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.