Skip to main content

குடும்பம் வாழையடி வாழையாக வாழ வேண்டுமா ?

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

கோடைக்கால இறுதி மாதமான ஆனி மாதத்தில் சில தமிழகக் கோவில்களில் பழங்களால் பூஜைகள் நடைபெறுகின்றன. திருச்சி உறையூர் திருத்தலத்தில் மேற்கூரையில்லாமல் திறந்தவெளியில் கோவில் கொண்டுள்ள வெக்காளியம்மனுக்கு ஆனி மாதப் பௌர்ணமியன்று மாம்பழங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெறும். கூடைகூடையாக மாம்பழங்களை அபிஷேகித்து, பூஜைகள் முடிந்ததும் . அதனை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவார்கள்.
 

palani temple

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலிலும் ஆனிப் பௌர்ணமியன்று பக்தர்கள் வாழைப்பழத்தாரினை மட்டுவார் குழலம்மைக்கு சமர்ப்பித்து, தங்கள் குடும்பம் வாழையடி வாழையாக வாழவேண்டுமென்று பிரார்த்தனை செய்வார்கள். வழிபாடுகள் நிறைவடைந்ததும் வாழைப்பழங்களை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குவர்.

ஆனி மாதப் பௌர்ணமியன்று காரைக்காலில் காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழா நான்கு நாட்கள் நடைபெறும். பௌர்ணமியன்று இறைவனும் இறைவியும் வீதியுலா வரும்போது, பக்தர்கள் வீட்டின் மேல்பகுதியில் நின்றுகொண்டு கூடைகூடையாக மாம்பழங்களை அபிஷேகிப்பார்கள். (அதாவது மேலிருந்து இறைவன், இறைவிமீது கொட்டுவார்கள்.)

ஆனி உத்திரத்தன்று சிவாலயங்களில் எழுந்தருளியிருக்கும் நடராஜப்பெருமானுக்கு அபிஷேகங்கள் நடைபெறும்போது, பலவித பழங்களைக் கொண்டு (ரசம் பிழிந்து) அபிஷேகம் நடைபெறுவதை தரிசிக்கலாம்.
 

srirangam temple

ஸ்ரீரங்கத்தில் அருள்புரியும் ஸ்ரீரங்கநாதருக்கு ஆனி கேட்டை நட்சத்திரத்தன்று ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும். அதற்கு அடுத்த நாள் திருப்பாவாடை நிகழ்ச்சி என்ற பெயரில், சுமார் 250 படி சுத்த அன்னத்துடன் மாம்பழங்கள், வாழைப்பழங்கள், தேங்காய்த்துருவல், நெய் ஆகியவற்றை கலந்து நம்பெருமாளுக்கு சமர்ப்பிப்பார்கள். இதேபோல் தாயாருக்கும் அடுத்த வெள்ளிக்கிழமையில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றதும், அதற்கு அடுத்த நாள் திருப்பாவாடை வைபவம் பெரிய அளவில் நடைபெறும்.

பழனி திருத்தலத்தில் ஆனி மாத விசாக நட்சத்திரத்தன்று ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும். அப்பொழுது, பலவிதமான பழங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழச்சாறு அபிஷேகம் நடைபெறும். இது மிகச் சிறப்பானது. இதனை பிரசாதமாகவும் வழங்குவர். மேலும், ஆனி கேட்டை நட்சத்திரத்தன்று மலையடிவாரத்தில் உள்ள முருகன் கோவிலில் அன்னாபிஷேக வைபவம் நடைபெறும்.

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.