Skip to main content

நெதர்லாந்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு...

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

 

netherland

 

நெதர்லாந்தின் உட்ரெட்ச் நகரில் பயணித்துக்கொண்டிருந்த டிராம் வண்டியின் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். டிராம் வண்டியில் பயணம் செய்தவர்களை குறிவைத்து மர்மநபர்கள் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து தீவிரவாத தடுப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதில் காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக அந்த பகுதிக்கு ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்