டெல்லியில் திடீரென ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தை மையமாகக் கொண்டு பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. ஃபரிதாபாத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி என்.சி.ஆர், ஆக்ரா, சஜ்ஜார் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நில அதிர்வு காணமாக அச்சமடைந்த மக்கள் வீடுகளையும் அலுவலகங்களையும் விட்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக டெல்லியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 3.1 என ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.