Skip to main content

குண்டு வெடிப்பு சம்பவம்-இலங்கை அமைச்சரின் சகோதரர் கைது

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று அடுத்தடுத்த 8 இடங்களில் குண்டுகள் வெடித்தது. இதில் உள்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகத்தையே உலுக்கிய இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் படங்களை  நேற்று இலங்கை காவல்துறை வெளியிட்டிருந்தது.

 

bomb

 

இந்நிலையில் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கை வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீன் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. அமைச்சரவையில் உள்ள ஒருவரின் சகோதரர் கைது செய்யப்பட்டிருப்பது அரசியில் ரீதியாக முக்கிய அம்சமாகவும் முக்கிய திருப்பமாகவும் பார்க்கப்படுகிறது.  

 

 

 

சார்ந்த செய்திகள்