Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; கணவனை அடித்துக் கொன்ற மனைவி

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

wife beat her husband to passed away with a stick

 

ஈரோடு கனிராவுத்தர்குளம், ஜாமியா மஸ்ஜித் பின்புற வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (52). இவரது மனைவி பத்மா (51). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மகனுக்கு திருமணம் ஆகி குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். சுப்பிரமணி தறி பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.

 

இந்நிலையில் சுப்பிரமணிக்கு வேறு ஒரு பொண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த பத்மா உறவை கைவிடுமாறு பலமுறை கணவரை கண்டித்துள்ளார். எனினும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத சுப்பிரமணி உறவை தொடர்ந்து உள்ளார். மேலும் இது தொடர்பாக மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் சுப்பிரமணி திருமணத்தை மீறிய உறவை கைவிட மறுத்து பத்மாவை கொடுமைப்படுத்தி வந்தாக தெரிகிறது.

 

இந்த நிலையில் நேற்று இரவும் சுப்பிரமணி-பத்மாவும் இடையே இது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவரும் பின்னர் தூங்கச் சென்று விட்டனர். எனினும் ஆத்திரத்தில் இருந்த பத்மா இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென எழுந்தார். பின்னர் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து வந்து சுப்பிரமணியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் பத்மா வீட்டின் கதவை பூட்டிவிட்டு நேராக வீரப்பன் சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று அங்கி நடந்ததை கூறி சரணடைந்துள்ளார். 

 

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வீரப்பன்சத்திரம் போலீசார் பத்மாவை அழைத்துக் கொண்டு அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு கதவை திறந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் சுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனை அடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பத்மாவை கைது செய்தனர். குடும்ப தகராறில் கணவனை மனைவியே கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்