Skip to main content

தலைவிரித்தாடும் தண்ணீர்பஞ்சம்  இளைஞரின் உயிரைக் குடித்தது!

Published on 07/06/2019 | Edited on 07/06/2019

 

தமிழகத்தில் நிலவும் குடிதண்ணீர் பஞ்சம் காவிரி பாயும் தஞ்சையையும் விட்டு வைக்கவில்லை. டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் உறவும் நட்பும் கூட விரோதிகள் ஆகிறார்கள்.  காரணம் காவிரி முதல் கொள்ளிடம் வரை அத்தனை ஆறுகளிலும் 20 அடி உயரத்திற்கு இருந்த மணலை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் களவாட விட்டதுடன் நகரை சுற்றி வியாபாரத்திற்காக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கவும் வாய்மொழி அனுமதி கொடுத்து மாத மாமூல் பெற்றது தான்.
   

a

 

   நாளுக்கு நாள் வெயிலும் அதிகரிக்க  தண்ணீர் பஞ்சமும் அதிகரித்தது. இதனால் காலிக்குடங்களுடன் நீரைத் தேடி ஓடுகிறார்கள் மக்கள்.  இந்த நிலையில் தான் தஞ்சை விளார் வடக்கு பகுதியை சேர்ந்த ஆனந்தபாபு தினசரி வாட்ஸ் அப் மூலம் முக்கிய செய்திகளை வாசிப்பதுடன் கிராமத்தின் பிரச்சனைகளிலும் தலையிட்டு தீர்த்து வைப்பார். தண்ணீரால் பிரச்சனை வக்கூடாது என்பதால் தானே தண்ணீர் திறந்து விடுவார். குடிதண்ணீர் வரவில்லை என்றால் மக்களோடு சென்று அதிகாரிகளை பார்ப்பார். அதன் பிறகும் ஆகவில்லை என்றால் மக்களைத் திரட்டி போராடுவார். 

 

 அப்படித்தான் கடந்த வாரம் விளார் பகுதியில் ஒரு பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்பதால் அதிகாரிகளை பார்த்தும் பயனில்லை என்பதால் மக்களோடு இணைந்து  போராடி லாரியில் தண்ணீர் கொண்டுவர வைத்தார். அந்த லாரித் தண்ணீரில் தனக்கான எமனும் வந்தது தெரியவில்லை அவருக்கு.


   அதே பகுதி குமார் மற்றவர்களை விட அதிகமான குடங்களுடன் தண்ணீர் பிடிக்க வந்தார். எல்லாருக்கும் சில குடங்கள் தான் என்று ஆனந்தபாபு சொல்ல தள்ளுமுள்ளு ஏற்பட்டு குமாரின் மகன்கள் வந்து ஆனந்தபாபு மற்றும் அவரது தந்தையையும் சேர்த்து தாக்கினார்கள். படுகாயத்துடன் மருத்துவக்கல்லூரி மருத்து மனையில் சேர்த்தார்கள்.  ஆனந்தபாபு அந்த கிராம மக்களை ஏமாற்றிவிட்டு மரணித்துவிட்டார்.


எந்தப் பிரச்சனையானாலும் முன்னே வந்து நிக்கும் ஆனந்து தம்பிய இப்படி ஒரு குடம் தண்ணி பழிவாங்கிவிட்டதே.. இனி எங்க பிரச்சனையை யார் எடுத்துச் செல்வார் என்று கண்ணீர் வடிக்கின்றனர் விளார் வடக்கு பகுதி மக்கள்.   


நீட் அரக்கனுக்கு மாணவிகள் பலியாவது போல குடிதண்ணீர் பஞ்சத்துக்கு துடிப்பான இஞைர்கள் பலியாகத் தொடங்கிவிட்டது.
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

குப்பைக்கிடங்கில் கட்டப்படும் தரைநிலை தண்ணீர்தொட்டி! பொதுமக்கள் எதிர்ப்பு!

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

 

    திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் ஆத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு மேற்கே சித்தையன்கோட்டை சாலையில் பேருந்து நிறுத்தம் எதிரே ஒரு லட்சம் கொள்ளளவு உள்ள தரைநிலைத் தண்ணீர் தொட்டி புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இங்கிருந்து ஆத்தூர், அம்பாத்துரை, வீரக்கல், சீவல்சரகு உட்பட கிராம ஊராட்சிகளுக்கு குடிதண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

 

w


 புதிதாக கட்டப்பட்டு வரும் தண்ணீர் தொட்டி பகுதி ஏற்கெனவே குப்பைக்கிடங்காக இருந்ததால் தண்ணீர் தொட்டி கட்டப்படும் இடத்தைச் சுற்றி டன் கணக்கில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், துணிக் கழவுகள் மலைபோல் குவிந்துள்ளன. இதனால் தரைநிலை தண்ணீர்தொட்டி உறுதியற்ற நிலையில் கட்டப்படுவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புகார் செய்கின்றனர். 

 

w


இதுகுறித்து ஆத்தூர் கிராம மக்கள் கூறுகையில்,  ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணிக்கு இந்த இடம் குப்பைக்கிடங்கு என்று தெரியும். தெரிந்திருந்தும் அங்கு பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடிதண்ணீர் தொட்டி கட்ட அனுமதித்துள்ளார். ஆத்தூர் முழுவதும் களிமண் சட்டு உள்ள பூமி. இங்கு கட்டப்படும் கட்டிடங்கள் உயரமான கட்டிடங்கள் கட்டும்போது அதிக கவனம் செலுத்தி கட்டவேண்டும். இல்லையென்றால் கட்டிடம் விரிசல் அடையும். இங்கு கட்டப்படும் தரைநிலை தண்ணீர்தொட்டியில் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீரை தேக்கி வைப்பார்கள்.

 

குப்பைக் கழிவகள் மத்தியில் தண்ணிர் தொட்டி கட்டினால் பாதுகாப்பற்ற நிலை ஏற்படுவதோடு தண்ணீரில் அசுத்தங்கள் கலந்து தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. அதனால் தண்ணீர்தொட்டி கட்டப்படும் இடத்தைச் சுற்றியுள்ள குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலும் அகற்றிவிட்டு, தண்ணீர் தொட்டி கட்டினால்தான் உறுதி ஏற்படும். இல்லையென்றால் தண்ணீர் தொட்டி கட்டிடம் விரிசலடையும் என்றார்கள். மாவட்ட ஆட்சியர்கள் தனிக்கவனம் செலுத்தி பாதுகாப்பான முறையில் தண்ணீர்தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்!
 

Next Story

பேச்சிப்பாறையில் இருந்து தண்ணீர் திறப்பு

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

 

குமாி மாவட்டத்தில் பாசனத்திற்காக இன்று பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது.

        குமாி மாவட்டத்தில் விவசாயத்தின் ஜீவ நாடியாக இருந்து வருவது பேச்சிப்பாறை அணையின் தண்ணீா். இந்த அணையில் இருந்து ஆண்டுத்தோறும் ஜீன் 2 அல்லது 3-ம் நாள் விவசாயத்திற்கு தண்ணீா் திறந்து விடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டும் ஓரு மாதம் நெருங்கியும் தண்ணீா் திறந்து விடாததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்திருந்த பயிா்கள் கருகியது. விளை நிலங்களும் குளங்களும் வறண்டு காணப்பட்டது. 

 

k

         

பொதுவாக அணைகளில் 1500 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பு இருந்தால் பாசனத்திற்கு தண்ணீா் திறந்து விடலாம் என்று விதிமுறை உள்ளது. தற்போது மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாா்-1, சிற்றாா்-2 அணைகளில் தண்ணீா் இருப்பு இருக்கும் நிலையில் தண்ணீா் திறந்து விடாததால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

         

kk

இதையடுத்து கோதையாறு பாசனத்திற்காக 28-ம் தேதியில் இருந்து அடுத்த மாதம்  28-ம் தேதி வரை நாள் ஓன்றுக்கு விநாடிக்கு 850 கன அடி வீதம் தேவைக்கு ஏற்ப மற்றும் தண்ணீா் இருப்பு மற்றும் நீா் வரத்தை பொறுத்து அணையை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. 

 

இந்த நிலையில் இன்று தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் மாவட்ட ஆட்சியா் பிரசாந் வடநேரா பேச்சிப்பாறை அணையில் இருந்து  தண்ணீரை திறந்து வைத்தாா். இதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்ததுடன் விவசாய நிலத்துக்கும் தண்ணீா் பெருக்கெடுத்தது.