Skip to main content

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; மூவர் மீது போக்சோ வழக்கு

Published on 24/04/2023 | Edited on 24/04/2023

 

villupuram kappiyampuliyur school students related incident  

 

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அருகே உள்ள காப்பியம் புலியூர் ஏரிக்கரை பகுதியில் ஒரு பள்ளி மாணவியும், மாணவனும் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி தனிமையில் பேசிக் கொண்டிருந்தபோது அவர்களை நோட்டமிட்டு பின் தொடர்ந்து சென்ற மூன்று வாலிபர்கள், மாணவியுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்த மாணவனை கத்தியால் குத்தி விட்டு அவர்கள் வைத்திருந்த செல்போன்கள் மாணவியின் வெள்ளி கொலுசு மற்றும் மோதிரம் ஆகியவற்றை பறித்ததோடு மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாணவி கூச்சலிட மூவரும் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டனர்.

 

இது குறித்து தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞர்களை பிடிப்பதற்காக, விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். மாணவி இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் பற்றி அளித்த அடையாளங்களின்  அடிப்படையிலும், அப்பகுதியில் சம்பவத்தன்று செயல்பட்ட செல்போன் சிக்னலை வைத்தும் தீவிர விசாரணை செய்து வந்தனர். மேலும்  மாணவியிடம் இருந்து பறித்துச் சென்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அது இயங்கி வந்துள்ளது. அந்த மொபைல் போன் சிக்னலை வைத்து கோலியனூர் அடுத்த குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த குடியரசு (வயது 23), அபி என்கிற அபினேஷ் (வயது 23), அன்பு (வயது 22) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

 

போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மூவரும் மாணவனை கத்தியால் குத்தியது மற்றும் மாணவியிடம் பாலியல் துன்புறுத்தல் செய்ததும் தாங்கள் தான் என்பதை ஒத்துக்கொண்டனர். அவர்கள் பயன்படுத்திய பைக், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் விழுப்புரம் மற்றும் அதனை  சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள காதலர்கள் தனிமையில் சந்திக்கும் இடங்களை நோட்டமிட்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்று மிரட்டுவது அவர்களிடம் இருக்கும் பணத்தை பறிப்பது பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது மற்றும் வழிப்பறி கொள்ளை செய்வது என பல்வேறு குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது தெரிய வந்தது இதை எடுத்து இவர்கள் மீது போக்சோ  சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.