Skip to main content

"டெங்குவால் இந்தாண்டு மூன்று பேர் உயிரிழப்பு"- ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி!

Published on 10/10/2021 | Edited on 10/10/2021

 

"Three people have died due to dengue this year" - J. Radhakrishnan interview!

 

சென்னையில் மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சியை ஆய்வு செய்தப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், "போலியோவை போல் கரோனா ஒழிக்கப்பட்ட நோயல்ல என்பதை மக்கள் உணர்ந்து தடுப்பூசிப் போட வேண்டும். கடலூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தான் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. டெங்குவால் இந்தாண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 20 லட்சம் பேர் இரண்டாவது கரோனா தடுப்பூசிப் போட்டுக் கொள்ளாதது சவாலாக இருக்கிறது" எனத் தெரிவித்தார். 
 

சார்ந்த செய்திகள்