Skip to main content

திருடு போன நகை... திரும்பி வந்த அதிசயம்...

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

Thieves return stolen jewels

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள நத்தாமூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் சுதா(48). இவரது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட, தனது இரு பெண் பிள்ளைகளையும் கூலி வேலை பார்த்து படிக்க வைத்து வருகிறார். இதனிடையே ஆடுகளை வளர்த்து அதன் மூலம் வருவாய் ஈட்டியும் வருகிறார். மேலும், மகள்களின் திருமணத்திற்காக கிடைக்கும் பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக 13 சவரன் நகைகளைச் சேமித்து வைத்திருந்தார். சுதா தினசரி கூலி வேலைக்கு செல்வதும், அதன் பிறகு ஆடுகளை மேய்ப்பதற்கு ஓட்டிச் செல்வதுமாக இருக்கிறார். பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்கின்றனர். 

 

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு கூலி வேலை கிடைக்காததால் அன்று முழு நேரம் ஆடுகளை மேய்ப்பதற்காகக் காட்டுப் பகுதிக்கு ஓட்டிச் சென்றார். மாலையில் ஆடுகளுடன் வீடு திரும்பிய சுதா பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்குள் சென்று பார்த்த போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவரது கூரை வீட்டின் மேற்கூரையைப் பிரித்து உள்ளே நுழைந்த திருடர்கள் அவர் சேமித்து வைத்திருந்த 13 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றிருந்தனர். பதறிப்போன சுதா இதுகுறித்து திருநாவலூர் காவல்துறைக்குத் தகவல் அளித்தார். 

 

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்தத் தகவல் அப்பகுதி எங்கும் பரவியது. இந்த நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு சுதா ஆடுகளை மேய்க்க ஓட்டிச் செல்வதற்காக கொட்டகைக்கு உள்ளே சென்றார். அப்போது, வீட்டுக்கூரையைப் பிரித்து உள்ளே புகுந்து 13 சவரன் நகையைக் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள், அந்த நகைகளை மீண்டும் வந்து ஆட்டுக்கொட்டகையில் போட்டுவிட்டுச் சென்றிருந்தனர். அதை எடுத்து சரிபார்த்த போது அதில் அரை சவரன் மட்டும் குறைந்திருந்தது. இருப்பினும், போலீசார் அந்தக் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.