/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a7004.jpg)
இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல்களைகட்டி வருகிறது.முதல்கட்டமாகதமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில்நிலையத்திலிருந்துதிருநெல்வேலிக்குச்செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர்நவீன்மற்றும்லாரிஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன்ஆஜராகிபதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில்காவல்துறைக்குப்பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களானஆசைத்தம்பி,ஜெய்சங்கர்ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத்தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில்போலீசார்முருகன்,ஆசைத்தம்பி,ஜெய்சங்கர்ஆகியோருக்குசம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்றுதாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கைசிபிசிஐடிவிசாரணைக்கு மாற்றி தமிழகடிஜிபிசங்கர்ஜிவால்அதிரடியாக உத்தரவுபிறப்பித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)