Skip to main content

தம்பிதுரையின் கனவை கவனமாக தகர்த்த எடப்பாடி பழனிச்சாமி ! 

Published on 08/07/2019 | Edited on 08/07/2019

 

தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுகவுக்கு உள்ள 3 இடத்தில் ஒரு இடம் பாமகவுக்கு தரப்பட்டது. மீதியுள்ள 2 இடத்தை கேட்டு தம்பிதுரை, கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, சிவபதி மற்றும் தமிழ்மகன் உசேன், முன்னாள் எம்பிக்கள் அன்வர் ராஜா, மைத்ரேயன் உள்பட 40 பேர் போட்டி போட்டு இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். ஆகியோருக்கு நெருக்கடி கொடுத்தார்கள். 

 

th

 

ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் முன்னாள் அமைச்சர் முகமதுஜான், மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, தம்பிதுரைக்கு எப்படியும் எம்பி சீட் வழங்கி விடுவார்கள்.  முதல்வர், நம்முடைய ஆள் ஒருவர் டெல்லியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதனால் அவருக்கு சீட்டு கிடைக்கும் என்றார்கள். ஆனால் அவருக்கு எம்பி சீட் மறுக்கப்பட்டுள்ளது. 

 

தம்பிதுரை அதிமுக கட்சியில் மிக முக்கியமான சீனியர். இந்திய முழுவதும் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருபவர். ஜெ. மறைவுக்கு பிறகு சசிகலாவை ஆதரித்து அறிக்கை வெளியிட்டவர். அதிமுகவில் தனக்கு எப்படியும் முக்கிய பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். பிஜேபி தான் எல்லாமும் என்று தெரிந்த பிறகு அவர்களிடம் கட்சியில் முக்கிய பதவி கொடுக்க வேண்டும் போராடினார். கடைசியில் எதவும் கிடைக்காது என்று தெரிந்தவுடன் பிஜேபி எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்தார். 

 

எம்.பி. தேர்தலில் பாஜவுடன் கூட்டணி வைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் தம்பிதுரை. பாஜவை தோளில் சுமக்க நாங்கள் என்ன பாவம் செய்தோம் என்று கேட்டார். இதனால் தம்பிதுரை மீது டெல்லி பாஜ தலைவர்கள் கோபத்தில் இருந்தனர். 

 

இதனை அறிந்த தம்பிதுரை தனக்கு எம்.பி. தேர்தலில் சீட்டு வேண்டாம். மாநிலங்களவையில் சீட்டு கொடுங்கள் என்று தலைமையுடன் கேட்டுக்கொண்டார். ஆனால் எடப்பாடியும், ஓ.பி.எஸ். இருவரும் இணைந்து நீங்கள் கட்சியின் சீனியர் உங்களுக்கு இருக்கும் செல்வாக்கிற்கு நீங்கள் தேர்தலில் நின்றே ஜெயித்து விடலாம். தற்போது ஜெயிக்கிற கூட்டணி ஒருவேளை தோல்வி ஏற்பட்டால் பார்த்துக்கொள்ளலாம் என்று மனசை மாற்றி கரூர் தொகுதிக்கு தம்பிதுரையை ஒதுக்கினார்கள். தம்பிதுரையும் வேறு வழியில்லாம் தேர்தலில் நின்றார். 

 

ஆனால் தம்பிதுரைக்கு கட்சியினர் யாரும் வேலை செய்யவில்லை. இதனால் கரூர் தொகுதியில் படுதோல்வியை சந்தித்தார். இதன்பின், முக்கிய கூட்டம், நிகழ்ச்சிகளுக்கு கூட அவரை அதிமுகவினர் அழைப்பதில்லை என்று சொன்னாலும் திட்டமிட்டு தவிர்த்து வந்தார். இந்த நிலையில் அவர் வேறு கட்சிக்கு தாவ போவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தனக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார்.

 

ஆனால் கூட்டணி விவகாரத்தில் பாஜவையும், மத்திய அரசையும் விமர்சித்த தம்பிதுரைக்கு எம்பி சீட் கொடுக்க கூடாது என பாஜ மேலிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு போட்டு விட்டது. தம்பிதுரைக்கு எம்பி சீட் கொடுக்க நினைத்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பின் வாங்கி விட்டார். தமிழகத்தில் இன்னும் 2 ஆண்டு அதிமுக ஆட்சி உள்ளது. அதை காப்பாற்ற வேண்டும் என்றால் டெல்லி தலைவர்களின் தயவு தேவை. இதனால்தான் தம்பிதுரைக்கு சீட்டு கொடுக்க கூடாது என்று இருந்த எடப்பாடி கவனமாக பழியை டெல்லிமீது போட்டார். 

 

தனக்கு இனி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வாய்ப்பில்லை.  அதனால் எப்படியும் ராஜ்யசபா சீட்டு வாங்கிடலாம் என்று தொடர்ந்து முயற்சி செய்து வந்த தம்பிதுரையும் கனவை முதல்வர் எடப்பாடி கவனமாக கையாண்டு அவருடைய கனவை தகர்த்தார் என்கிறார்கள் அதிமுக முக்கிய புள்ளிகள் ! 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஊழலை ஒழிப்பதே அதிமுகவின் நோக்கம்..” - எம்.பி. தம்பிதுரை 

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

"The aim of ADMK is to eliminate corruption." - MP Thambidurai
கோப்புப் படம்

 

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு செய்தல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி தலைமையில் நடைபெற்றது.

 

இதில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், பூத் கமிட்டி  திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளருமான தம்பிதுரை கலந்துகொண்டு பூத் கமிட்டி ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். அப்போது பேசிய தம்பிதுரை, “தேர்தல் நேரத்தில் மட்டும் நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக கூறுகின்றனர். எம்.ஜி.ஆர் வேறு மற்ற நடிகர்கள் வேறு. நடிகர்களை நம்பி அரசியலுக்கு வந்தவர்கள் இன்று காணாமல் போய் உள்ளனர் என பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

திமுகவில் கலைஞர் தொடங்கி தற்போது ஸ்டாலின் வரை குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் குடும்ப ஆட்சி நடத்திய காங்கிரஸ் இன்று காணாமல் போய்விட்டது. திமுக என்ற கட்சியும் விரைவில் காணாமல் போகும். அதிமுகவின் நோக்கம் தமிழகத்தில் குடும்ப ஆட்சியையும், ஊழலையும் ஒழிப்பது மட்டுமே” என்றார்.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், ஜோலார்பேட்டை நகரச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி அதிமுக பொறுப்பாளர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூத் கமிட்டி முகவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Next Story

“மோடிக்கு குடும்பம் இல்லை... செங்கோட்டை தான் வீடு” - கார்கேவுக்கு தம்பிதுரை பதில் 

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

"Modi has no family.. Red Fort is his home" - Thambidurai's answer to Kharge

 

நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். பிறகு சுதந்திர தின கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “என்னுடைய இரண்டாவது பிரதமர் பதவிக் காலத்தில் 10வது முறையாக உரையாற்றுகிறேன். இந்தியா அடைந்துள்ள சாதனைகளை அடுத்த ஆண்டு மீண்டும் இதே இடத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மக்களிடம் பட்டியலிடுவேன்” என்று தெரிவித்தார். 

 

இதற்கு  காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “தேர்தலில் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும் மக்களின் கைகளில் உள்ளது. மீண்டும் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவேன் என்று பிரதமர் கூறுவது அவரது ஆணவத்தைக் காட்டுகிறது. அவர் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை விமர்சித்து வருகிறார். சுதந்திர தின உரையில் கூட எதிர்க்கட்சிகளைப் பற்றி விமர்சனம் செய்பவரால் நாட்டை எப்படி கட்டி எழுப்ப முடியும். அடுத்த ஆண்டு அவர் மீண்டும் தேசியக் கொடியை ஏற்றுவார். ஆனால், அதை அவரது வீட்டில் செய்வார்” என்று தெரிவித்தார்.

 

"Modi has no family.. Red Fort is his home" - Thambidurai's answer to Kharge

 

இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்துக்கு பதில் அளித்த அதிமுக எம்.பி தம்பிதுரை, “பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை. இந்தியாதான் அவரது குடும்பம். செங்கோட்டைதான் அவரது வீடு. அதனால் பிரதமர் மோடி அடுத்த ஆண்டு அவரது வீட்டில் தான் தேசியக் கொடி ஏற்றுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சரியாகத்தான் சொல்லியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.