Skip to main content

'24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!'

Published on 13/06/2021 | Edited on 13/06/2021

 

 

tamilnadu 24 district new district collectors appointed tn govt order

தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்- கவிதா ராமு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்- கோபால சுந்தரராஜ், திருவாரூர் மாவட்ட ஆட்சியர்- காயத்ரி கிருஷ்ணன், ஈரோடு மாவட்ட ஆட்சியர்- கிருஷ்ணன் உன்னி, தஞ்சை மாவட்ட ஆட்சியர்- தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தென்காசி மாவட்ட ஆட்சியர்- சந்திரலேகா, சென்னை மாவட்ட ஆட்சியர்- விஜயா ராணி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்- அல்பி ஜான் வர்கீஸ், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்- டி.மோகன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்- எம்.ஆர்த்தி, தேனி மாவட்ட ஆட்சியர்- முரளிதரன், நாகை மாவட்ட ஆட்சியர்- தம்புராஜ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்- பி.என்.ஸ்ரீதர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்- முருகேஷ், கரூர் மாவட்ட ஆட்சியர்- பிரபு சங்கர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர்- மேகநாத ரெட்டி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்- ராகுல்நாத், கோவை மாவட்ட ஆட்சியர்- ஜி.எஸ்.சமீரன், அரியலூர் மாவட்ட ஆட்சியர்- ரமண சரஸ்வதி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்- வினீத், நாமக்கல் மாவட்ட ஆட்சியர்- ஸ்ரேயா சிங், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்- விசாகன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்- அமர் குஷ்வாஹா, வேலூர் மாவட்ட ஆட்சியர்- குமரவேல் பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமலாக்கத்துறை சம்மன்; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
Enforcement Department Summons; Supreme Court action order

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்ககளுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழஙக வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர். 

Next Story

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய உத்தரவு!

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
District Collectors Chief Minister M.K. Stalin's main order

நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2024 ஆம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

இதனையடுத்து 2024 ஆம் ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாகப் பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைப்பிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 7 ஆயிரத்து 40 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 26 கோடியே 81 இலட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் எனத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.