Skip to main content

பண்ணை வீட்டிற்குச் சென்றடைந்தது எஸ்.பி.பியின் உடல்!

Published on 25/09/2020 | Edited on 25/09/2020

 

SPB's body reached the farm house

 

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிரிழந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல், நாளை (26/09/2020) அடக்கம் செய்யப்படும் என்று எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் தெரிவித்திருந்த நிலையில், அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து திருவள்ளூரில் உள்ள பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது அவரின் உடல் பண்ணை வீட்டிற்குச் சென்றடைந்தது.

 

 

சார்ந்த செய்திகள்