Skip to main content

டேங்கர் லாரி பெயர் மாற்ற 5,500 ரூபாய் லஞ்சம்; ஆர்.டி.ஓ, புரோக்கர் கைது

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

bn

 

கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கேப்பர் மலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலராக சுதாகர் என்பவர் செயல்பட்டு வந்தார். இவர் மீது பல்வேறு லஞ்ச புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. எந்த ஒரு பணிக்காகவும் இவர் லஞ்சம் பெறுவதாகவும் இந்த லஞ்சப்பணம் புரோக்கர்கள் மூலம் சென்னையில் ஒரு புரோக்கரிடம் கொடுத்து அதன் பிறகு சென்னையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுதாகரின் இல்லத்திற்கு இந்த பணம் செல்வதை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்து வந்தனர்.

 

இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஒருவர் கடலூரை சேர்ந்தவரிடமிருந்து கழிவு நீர் டேங்கர் லாரி வாங்கியுள்ளார். இந்த வாகனத்தை புதுப்பிப்பதற்காக கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை செல்வராஜ் என்பவர் மூலம் அணுகியுள்ளார். செல்வராஜ் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்து வட்டார போக்குவரத்து அலுவலரை சந்தித்தபோது அவர் அங்கு வந்த சிவா என்ற புரோக்கரை சந்திக்க கூறியுள்ளார். சிவா என்ற புரோக்கரை சந்தித்தபோது அவர் 5000 ரூபாய் ஆர்.ட்டி.ஓவிற்கு, தனக்கு 500 ரூபாய் என மொத்தம் 5,500 ரூபாய் தர வேண்டுமென கேட்டுள்ளார்.

 

இதனை கொடுக்க மனம் இல்லாத செல்வராஜ் தனது வாகனத்திற்கு அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ள நிலையில் தான் இதற்கான பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என கருதி கடலூர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதனிடம் புகார் தெரிவித்தார். தேவநாதனின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய 5,500 ரூபாய் பணத்தினை புரோக்கர் சிவாவிடம் இன்று கொடுப்பதற்காக செல்வராஜ் சென்றார். அப்பொழுது லஞ்ச ஒழிப்பு போலீசாரும் உடன் சென்ற நிலையில் செல்வராஜ் புரோக்கர் சிவாவிடம் அந்த பணம் கொடுத்து, அவர் ஆர்.டி.ஓவிடம் கொடுக்கும் பொழுது பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக இருவரையும் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ அறையில் சோதனை மேற்கொண்ட போது 2.5 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

இதனை தொடர்ந்து சென்னையில் பணம் கைமாற்றம் செய்யும் புரோக்கரையும் அங்குள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்த நிலையில் சென்னையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுதாகரின் வீடு மற்றும் கடலூரில் உள்ள அவரது வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.  வட்டாரப் போக்குவரத்து அலுவலர் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.