Skip to main content

ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்!

Published on 04/01/2021 | Edited on 04/01/2021
jkl

 

பொங்கல் பரிசுத் தொகுப்பை இன்று முதல் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ள தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

 

சேலம் மாவட்டம், இருப்பாளியில் சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி , "தமிழகம் முழுவதும் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 2,500 வழங்கப்படும். 2021- ஆம் ஆண்டு ஜனவரி 4- ஆம் தேதி முதல் ரூபாய் 2,500 வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும். துண்டு கரும்புக்கு பதிலாக முழு கரும்பு வழங்கப்படும். ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, முழு கரும்பு உள்ளிட்டவை கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். ஜனவரி 4- ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணித் துவங்கும்" என தெரிவித்திருந்தார். இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்பட இருக்கிறது. இதுவரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1,000 வழங்கி வந்த நிலையில், இம்முறை இது ரூபாய் 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்