Skip to main content

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை; தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை

Published on 14/04/2023 | Edited on 14/04/2023

 

Father jailed for 20 years

 

6 வயது மகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.

 

புதுச்சேரி உழவர்கரை பகுதியை சேர்ந்த 31 வயது கார் டிரைவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இதனிடையே டிரைவர் தமது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் போக்சோ  வழக்கு பதிவாகி உள்ளது. இதை அறிந்த மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து கன்னியகோவிலில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு மகளுடன் சென்றுவிட்டார்.

 

இந்நிலையில் தனது மகளை காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் உறவினர் ஒருவர் மூலம் சிறுமியை அனுப்பிய நிலையில் அங்கு வந்த டிரைவர் சொந்த மகள் என்றும் பாராமல் ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுபற்றி அறிந்த மாணவி அதிர்ச்சி அடைந்து கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் கடந்த 13/4/2022 அன்று  டிரைவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர்.

 

இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் (மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி) நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து வழக்கினை விசாரித்த தலைமை நீதிபதி செல்வநாதன் நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றவாளியான டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்குவும் அரசுக்கு உத்தரவிட்டார். கடந்தாண்டு ஏப்ரல் 13ஆம் தேதி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஓராண்டு கழித்து அதே நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இதனிடையே கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கூடலூர் கிராமத்தை சேர்ந்த செல்வம்(54) என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் இவர் தாயார் இறந்துவிட கடந்த ஆறாம் தேதி சொந்த ஊருக்கு வந்திருந்தார். அன்றே அவரது இறுதிச் சடங்குகள் முடிந்தன. மறுநாள் ஏழாம் தேதி இரவு அப்பகுதியை சேர்ந்த 16 வயதுடைய 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி அங்குள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற போது செல்வம் மாணவியிடம் 'பீடி வாங்கிக் கொண்டு வா' என காசு கொடுத்துள்ளார். அந்த மாணவியும் கடைக்கு சென்று மளிகைப் பொருட்களை வாங்கிக்கொண்டு பீடியை செல்வத்திடம் கொடுத்த போது எதிர்பாராத விதமாக மாணவியின் கையை பிடித்து இழுத்து வாயை பொத்தி அருகில் உள்ளகாட்டுக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் செல்வம். இதுகுறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.