Skip to main content

ஒ.என்.ஜி.சிக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு!

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓ.என்.ஜி.சி.நிறுவனத்துக்கு எதிராக மனு கொடுக்க வந்த மக்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது, பிறகு வெளியில் வந்து மக்களை நேரடியாக சந்தித்த மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொள்வதாக உறுதி அளித்தால் மக்கள் கலைந்து சென்றனர்.
 

காவிரி டெல்டா பகுதி முழுவதும் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் கீழ் எண்ணெய் கிணறு அமைக்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. இதற்கு டெல்டா விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அதை தொடர்ந்து  ஓ.என்.ஜி.சி நிறுவனம் மேற்கொண்டுள்ள திட்டப்பணிகளை எதிர்த்து காவிரி டெல்டா மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ONGC COMPANY AGAINST PEOPLES HAS PETITION GIVE TO COLLECTOR

இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள சோழங்கநல்லூர் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக எண்ணெய் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் இது தொடர்பாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறிய பொதுமக்கள் இன்று மீண்டும் 50- க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பெரும் கூச்சல் ஏற்பட்டது. பிறகு மாவட்ட ஆட்சியர் ஆனந்த் நேரடியாக வந்து மக்களை சந்தித்தார்.
 

அப்போது மக்கள், "ஓஎன்ஜிசி நிறுவனம் இரவு நேரங்களில் ராட்சச இயந்திரங்களை கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் அதிக இரைச்சல் காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் என அனைவரும் தூக்கம் இன்றி அவதிப்படுகின்றனர். மேலும் விவசாய நிலங்களில் சாலைகள் அமைத்துள்ளனர். இதனால் மழை நீர் வடிய வழியில்லாமல் தேங்கி சாக்கடையாக உருவெடுத்து கொசுக்கள் உற்பத்தியாகிறது. அதன் காரணமாக மர்மக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது என தெரிவித்தன.  மக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் ஆனந்த் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொள்வதாக உறுதி அளித்த பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.