Skip to main content

சிமெண்ட் இல்லாத பாலத்தை தொடர்ந்து தோசைபோல் சுருட்டும் சாலை; நெடுஞ்சாலைத்துறையின் அடுத்த படைப்பு!!

Published on 05/06/2019 | Edited on 05/06/2019

ஒரு சாலை எப்படிப் போடக் கூடாது என்பதற்கு புதுக்கோட்டை மாவட்டமே சான்றாக அமைந்துள்ளது. 

ROAD


கடந்த மாதம் அறந்தாங்கி  - மீமிசல் சாலையில் இருந்த பணிக்கன் வயல் வழியாக கோங்குடி செல்லும் சாலையில் 3.840 கி.மீ. தூரத்திற்கு சாலை ரூ. 1.45 கோடிகளை மத்திய ஊராக வளர்ச்சி அமைச்சகம் நிதி ஒதுக்கியது. அந்த நிதியை புதுக்கோட்டை மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை பாக்குடி கணபதி என்பரிடம் ஒப்பந்தம் கொடுத்து அதை கண்காணிக்க பணிப்பு பொறுப்பு அலவலராக உதவிப் பொறியாளர் வேல்முருகனையும் நியமித்தார்கள்.

 

ROAD

 

இடையில் 2 சிறு பாலங்களும், 7 தடுப்பு சுவர்களும் அமைக்கப்பட்டு சாலைப் பணியும் முடிவடைந்தது. பணிப் பொறுப்பு அதிகாரியும் தரமான சாலை என்று சான்று கொடுத்துவிட்டார். ஆனால் ஒரு மாதத்திற்குள் ஆங்காங்கே உடைந்து நொறுங்கியது. இது சம்மந்தமாக மே 3 ந் தேதி ஒரே மாதத்தில் பல்லைக்காட்டும் ஒன்றரைக் கோடி சாலை என்ற தலைப்பில் நக்கீரன் இணையத்தில் விரிவான செய்தி வெளியிட்டாம். அடுத்த நாளே உடைந்த இடங்களில் மீண்டும் பஞ்சர் ஒட்டி சரி செய்துவிட்டார்கள். அதிகாரிகளின் அலட்சியத்தால் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சாலையும் இப்படித் தான் தரமற்று போடப்படுகிறது என்பதற்கு அடுத்தடுத்த சான்றுகளை இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவுகளாக வெளியிடுகிறார்கள். 

 

ROAD


 

அதேபோல கடந்த வாரம் பொன்னமராவதி அருகே செவலூர் விலக்கு சாலையில் மணலையும் மண்ணை மட்டுமே கலந்து கட்டிய பாலம் கை விரல் வைத்தால் உடைந்து கொட்டுவதை பட ஆதாரங்களுடன் வெளியிட்டோம். இந்த நிலையில் தான் தற்போது ரூ. 3.13 கோடியில் அமைக்கப்பட்ட 5.10 கிமீ சாலை ஒரே நாளில் தோசைக் கல்லில் வெந்த ரோஸ்ட் தோசை போல மக்கள் சுருட்டி அள்ளும் அளவிற்கு உள்ளது. பொன்னமராவதி அருகில் உள்ள எம்.உசிலம்பட்டியிலிருந்து காயாம்பட்டி வழியாக ஒலியமங்கலம் செல்லும் சாலை பாரதப் பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ. 312.53 லட்சம் மதிப்பீட்டில் புதுக்கோட்டை மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை செயல்படுத்தும் விதமாக சோத்துப்பாளை முருகேசன் என்ற ஒப்பந்தக்காரரிம் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

 

 

இந்த பணிகளை செயல்படுத்தும் அதிகாரியாக பொன்னமராவதி ஒன்றியம் பாலமுரளியும் நியமிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பணிகள் தொடங்கியது. கிராம மக்கள் சந்தோசமாக இருந்தனர். நம்ம ஊருக்கும் நல்ல ரோடு வரப்போகிறது என்று.. ஆனால் சில நாட்களுக்கு முன்பு பணிகள் முடிக்கப்பட்டு ஆங்காங்கே விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சாலை தரமில்லை என்று இளைஞர்கள் சொல்ல சிலர் சாலையை கைகளால் தோண்ட தோண்ட அப்படியே கற்கள் சிதறளாக பெயர்ந்து வந்தது. தார் கலவையே இல்லாமல் போடப்பட்ட சாலையாக இருந்தது. 


 

இப்படி ஒரு தரமற்ற சாலை போட மாவட்ட அதிகாரிகள் தொடர்ந்து அனுமதி அளித்து வருகின்றனர்.

 

RAOD

 

இது குறித்து ஒலியமங்கலம் பகுதி இளைஞர்கள் சாலையில் மோசமான தரத்தை தோண்டிக் காட்டி வீடியோ வெளியிட்டனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களின் சிலர்..  10, 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் கிராம சாலைகள் தார்சாலைகளாக மாற்றப்படுகிறது. அதன் பிறகு பராமரிக்கவும் 10 வருசத்துக்கு மேல ஆகும். மத்திய அரசு நிதி கொடுப்பதை இங்குள்ள அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், ஒப்பந்தக்காரர்களும் பங்குபோட்டு எடுத்துக் கொண்டு மக்களுக்கு போட்ட சாலையை பாருங்கள் கையால தோண்டினால் அள்ளும் அளவில் உள்ளது. இதை மாவட்ட அதிகாரிகளும் கண்டுக்கல. ஆளுங்கட்சி பிரமுகர்களின் தார் கலவை தான் கொண்டு வந்து போட்டாங்க. வேலை செஞ்சவர்களிடம் கேட்டால்.. நாங்க என்ன செய்றது மூன்றேகால் கோடியில 2 கோடி வரை கமிசனா போயிடும். அப்பறம் ரோடு இப்படித் தான் போட முடியும் என்கிறார்கள். இந்த சாலைக்காண ஒப்பந்த பணத்தை அரசு நிறுத்த வேண்டும். இல்லை என்றால் மக்கள் திரண்டு போராடுவோம் என்றனர்.

 

RAOD

 


 

மத்திய – மாநில அரசுகள் இணக்கமாக இருந்தாலும் மத்திய அரசு நிதியை வாங்கி இப்படியா ஏப்பம் விடுவது. மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காக போடப்படும் சாலையை கூட இப்படியா மோசமாக போடுவது. சொந்த மக்களை வஞ்சித்து அவர்களின் பணத்தை சாப்பிடும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதே நேரத்தில் மக்கள் வயிறு எரிஞ்சு ஏசுவதை அந்த அதிகாரிகள் ஒரு நாள் உணருவார்கள். அப்போது மன்னிப்பு கேட்பதைவிட இப்போதே தரமான பணிகளை செய்ய உதவலாமே..

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

முதல் கூட்டத்திலேயே முட்டிக் கொண்ட தி.மு.க. - காங்கிரஸ்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
DMK Congress which was knocked out in the first meeting

ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுயில் உள்ள அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக புதுக்கோட்டை மா.செ அமைச்சர் ரகுபதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மெய்யநாதன், ராமநாதபுரம் மா.செ. காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்தியா கூட்டணி ராமநாதபுரம் வேட்பாளர் கே.நாவஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். கூட்டத்தில் பேச வந்த அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் பேசும், “இப்போது நாங்கள் கூட்டணி கட்சிக்கு வாக்கு சேகரிப்போம் ஆனால், அறந்தாங்கி தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அமைச்சர்கள் செய்து தர வேண்டும் இல்லை என்றால் தற்கொலை முயற்சியோடு அறிவாலயம் நோக்கி போவோம்” என்று பேசி கூட்டத்தில் சலசலப்பை உருவாக்கினார்.

அதனைத் தொடர்ந்து பேச வந்த காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் தலைவர் ராம.சுப்புராம் பேசும் போது, “அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவசரப் பணியாக டெல்லி சென்றுள்ளதால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் இன்றைய போஸ்டரில் அவர் படம் இல்லை இனிமேல் அச்சடிக்கும் போஸ்டர்களில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. படத்தையும் போட வேண்டும்” என்றார். மேலும் அமைச்சர் ராஜ. கண்ணப்பன் பேசும்போது, “நேற்று வேட்பாளர் அறிவிப்பு இன்று விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு. திராவிடர் இயக்கத்தை ஒழிக்க நினைக்கிறார்கள் பா.ஜ.க.வினர். அது ஒருபோதும் நடக்காது. பாசிக பா.ஜ.க. தான் நம்ம எதிரி அவர்களை வீழ்த்துவோம். அமைச்சர் மெய்யநாதன், “கடந்த முறை பெற்றுத் தந்த வாக்குகளைவிட அதிக வாக்குகளை பெற்றுத் தருவோம்” என்றார்.

DMK Congress which was knocked out in the first meeting

தலைமையுரையாற்றிய அமைச்சர் ரகுபதி, “முதல் கூட்டத்திலேயே சொல்கிறோம் சந்தோசமாக செல்லுங்கள், அறந்தாங்கி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தருவோம். ராமநாதபுரத்திற்கு குடிநீர் கொண்டு வருவதை நாங்கள் தடுக்கவில்லை. எங்களுக்கும் கொஞ்சம் வேண்டும் என்று தான் சொன்னோம்” என்றார். மேலும் உதயம் சண்முகத்திற்கு பதில் சொல்லும் விதமாக, “இந்த முறை ஏணிக்கு வாக்களியுங்கள் அடுத்த முறை (2026) தலைவர் விரும்பினால் உதயசூரியனுக்கு வாக்களிக்கலாம். அதே போல இனிமேல் அச்சடிக்கப்படும் ஒவ்வொரு போஸ்டரிலும் அறந்தாங்கி எம்.எல்.ஏ. படம் அச்சடிக்கப்படும்” என்று காங்கிரஸ் சுப்புராமுக்கும் பதில் கூறுவது போல பேசினார். இறுதியாக பேசிய வேட்பாளர் நவாஸ்கனி, “அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி அதிக ஓட்டுகள் பெற்றுத்தர வேண்டும்” என்றார்.

அறந்தாங்கி தொகுதி முதல் செயல்வீரர்கள் கூட்டத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் படம் இல்லாமல் வடிவமைக்கப்பட்டதும், 2026 சட்மன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க முடியவில்லை என்றால் அறிவாலயத்தில் தற்கொலை முயற்சி செய்வோம் என்று பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.