Skip to main content

பிடிபட்ட பணம் நடந்தது என்ன? காங்கிரஸ் தலைமை பூத் ஏஜெண்ட் விளக்கம்!

Published on 18/10/2019 | Edited on 18/10/2019

நாங்குநேரி அருகேயுள்ள மூலக்கரைப்பட்டி சமீபமாக உள்ள அம்பலம் கிராமத்தின் டாஸ்மாக் கடையின் பின்புறமுள்ள வீட்டிலிருந்த சிலர் வோட்டுக்குப் பணம் கொடுப்பதாக வந்தவர்கள் என்று கிராமத்தின் சிலர் அவர்களையும் அவர்கள் வைத்திருந்த பணத்தோடு மடக்கி அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்க, பறக்கும் படை அதிகாரிகள் அங்கு விரைந்ததாக நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
 

இது குறித்து நாம் காங்கிரசின் தலைமை பூத் ஏஜெண்ட்டும் தி.மு.க.வின் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வான ஆவுடையப்பனிடம் கேட்ட போது,

nanguneri assembly by election money seizures dmk avudaiyappan detailed explanation

அந்த வீடு ஊரின் ஒதுக்குப் புறத்தில் உள்ளது. அதில் கூட்டணியின் தேர்தல் பணிக்காக பெரியகுளம் தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வான சரவணக்குமாருடன் கட்சியினர் 10 பேர்கள் தங்கியிருந்தனர். அவர்கள் தங்களின் செலவிற்காகப் பணம் வைத்திருந்தனர். ஆனால் அவர்கள் அந்தக் கிராமத்தின் எந்த ஒரு வாக்காளரையோ, அல்லது அவர்கள் வீட்டுக்கோ சென்று வாக்குக்காகப் பணம் கொடுக்கவில்லை. அப்படி அவர்கள் கொடுக்கும் போது கையோடு பிடித்திருந்தால் சரி. அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. திடீரென்று அவர்கள் இருந்த வீட்டிற்குள் வந்த சிலர் திமுக ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணுவையும் மற்றும் ஒருவரையும் தாக்கியுள்ளனர். அதில் அவர்களுக்குக் காயமும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் அனைவரிடமும் இருந்த மொத்தப் பணத்தையும் கைப்பற்றி அப்படி அந்த மக்கள் சொல்லியிருக்கிறார்கள்.

nanguneri assembly by election money seizures dmk avudaiyappan detailed explanation


விசாரணைக்காக வந்த பறக்கும் படை மற்றும் ஐ.டி. அதிகாரிகளிடம் 10 பேர்களும் நடந்தவைகளைச் சொல்லியுள்ளனர். அதன் பின் அதிகாரிகள் அவர்களிடமிருந்த 2 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயையும் கைப்பற்றி முறைப்படி கணக்கு தெரிவிக்கச் சொல்லிப் போய் விட்டனர். மேலும் தாக்குதலில் இருவர் காயமடைந்ததால் முறைப்படி சுடலைக்கண்ணு போலீசில் புகார் செய்து விட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்கள் என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.