Skip to main content

நான் பெற்ற குட்டிகள் எங்கே...? தேடி வந்து எடுத்துச் சென்ற தாய் சிறுத்தை...ஒரு நெகிழ்ச்சி சம்பவம்...

Published on 27/12/2019 | Edited on 27/12/2019

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தையடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் வனத்தையொட்டியுள்ள கிராமம் தொட்டமுதுகரை. இந்த கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தங்கராஜ். இவரது  தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். அதில் சென்ற ஒருவாரகாலமாக கரும்புகளை வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று காலை கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் தோட்டத்தில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கரும்பு பயிரில் உள்ள தோகைகளுக்கு நடுவே இரண்டு சிறுத்தை குட்டிகள் ஒன்றோடொன்று விளையாடிக்கொண்டிருந்தது. பார்க்க பூனைக்குட்டி போல் இருந்தது.

 

mother cheetah search for babies

 

 

கரும்பு தொழிலாளர்கள் இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த விவசாயி தங்கராஜ் உடனடியாக அருகே உள்ள  ஜூரஹள்ளி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். சிறுத்தை குட்டிகள் இருந்த இடத்திற்கு வந்த வனச்சரகர் காண்டீபன் மற்றும் வனத்துறை பணியாளர்கள் கரும்பு தோட்டத்தில் இருந்த சிறுத்தை குட்டிகளை மீட்டனர். பூனை கூட்டி அன்பாக விளையாடுவது போல் இவைகளும் விளையாடியது. தாய் சிறுத்தை எங்காவது பதுங்கியிருக்கிறதா என்பதை அப்பகுதி முழுக்க தேடினார்கள். தாய் சிறுத்தை இருப்பிடத்தை அறிய முடியவில்லை. பிறகு வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு என்ன செய்வது என்று தகவல் கேட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு வனத்துறை உயர் அதிகாரிகள் அந்த இடத்தில் கண்கானிப்பு கேமராவையுங்கள் உறுதியாக தாய் சிறுத்தை வர வாய்ப்புள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.  கரும்பு வெட்டும் பணியை நிறுத்துமாறு கூறிவிட்டு அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தினார்கள் பிறகு வனத்துறை ஊழியர்கள் தங்களுக்கு பாதுபாப்பு கருவிகளோடு அந்த சிறுத்தை குட்டிகளை அதே கரும்பு தோட்டத்தில் விட்டு மதியம் முதல்  இரவு வரை காத்திருந்தனர் கரும்பு தோட்டத்தில் சிறுத்தைகுட்டிகள் இருந்த பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்லாமல் தடுத்தனர்.

அப்பகுதியில் தானியங்கி கேமராக்கள் இயங்க தொடங்கியது. இரவு 7.58 மணியளவில் ஒரு பெரிய சிறுத்தை பவ்வியமாக மெல்ல மெல்ல முன்னோக்கி வந்தது. அதுதான் தாய் சிறுத்தை. கரும்பு தோட்டத்தில் தனது குட்டிகளை விட்ட இடத்தில் தேடியது. குட்டிகள் இடம் மாறி இருந்தது.  கண்களில் கோபம் கொப்பளிக்க தான் ஈன்ற குட்டிகளுக்கு என்ன நடந்ததோ என்ற அபாய ஏக்கத்தில் உஷ்...உஷ்... என்ற பெருமூச்சுடன் ஒரு விதமான (அதாவது தாய் பூனை குட்டிகளை அழைப்பது போல்) சத்தமிட்டது. தாயின் அழைப்பை கேட்ட சிறுத்தை குட்டிகள் கரும்புக் காட்டுக்குள் மேலும் கீழும் குதித்தது. தாய் சிறுத்தை குட்டிகளை கண்டு விட்டது. தாய் பாசத்துடன் அங்கு வந்த தாய் சிறுத்தை குட்டிகளின் முகத்தோடு முகம் வைத்து கொஞ்சியதோடு பசியால் இருந்த தனது குட்டிகளுக்கு பாலூட்ட தொடங்கியது. இரு குட்டிகளும் பசியாறிய பிறகு மேலெழுந்து நின்று சுற்றுப் புறம் முழுக்க பார்வையால் அளந்தது. அதன் பிறகு தனது இரு குட்டிகளையும் வாயில் கவ்வி தூக்கிக் கொண்டு வனப்பகுதிக்கு சென்றது.

நமது குடியுரிமை காடு தான், நாடு அல்ல என்பதை தனது இரு குட்டிகளோடும் சொல்லாமல் சொல்லிச் சென்றது தாய் சிறுத்தை.

இது ஒருபுறம் இருக்க நாங்கள் வாழும் பகுதியில் நீங்கள் ஏன் இருக்கிறீர்கள் என்று கேட்பது போல்
அப்பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட வாய்ப்புள்ளதால் இரவில் யாரும் நடமாட வேண்டாம் என வனத்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.