Skip to main content

காலை முதல் காத்திருந்த ஆசிரியர்கள் தர்ணா

Published on 02/04/2018 | Edited on 03/04/2018
hi

 
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்காண இயக்கநர் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த ஆசிரியர்கள் இன்று வேட்பு மனு பரிசீலணைக்காக காலையிலேயே சென்று காத்திருந்தனர். ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரி வரவில்லை. அதனால் மாலை வரை காத்திருந்த ஆசிரியர்கள் அலுவலகத்திற்குள்ளேயே காத்திருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

   எவ்வளவு நேரம் காத்திருந்தாலும் அதிகாரி வரமாட்டார். ஆளும்கட்சி ஆசிரியர்கள் கொடுத்துள்ள வேட்பாளர் பட்டியலை நள்ளிரவில் ஒட்டிவிட்டு சென்றுவிடுவார்கள். அப்பறம் ஏன் காத்திருக்க வேண்டும் என்று சக ஆசிரியர்கள் கூறிவருகின்றனர். ஆனாலும் அதிகாரி வரும் வரை போகப்போவதில்லை என்று கூறியுள்ளனர் காத்திருக்கும் ஆசிரியர்கள். 
 

சார்ந்த செய்திகள்