Skip to main content

அமைச்சர் விஜயபாஸ்கர் மீது காவல் நிலையங்களில் தி.மு.க.வினர் புகார்

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

 

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் விருப்ப மனு வாங்குவது மக்களை சந்திப்பது போன்ற நிகழ்வுகள் கடந்த ஒரு மாதமாக வேகமாக நடந்து வருகிறது.

 

minister C. Vijayabaskar



புதுக்கோட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க சார்பில் புதுக்கோட்டை நகரில் அ.தி.மு.க. வார்டு வாரியாக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த வாரம் முதல்கட்டமாக ஒரு வார்டுக்கு சென்று கூட்டம் நடத்திய போது அங்கு திரண்டிருந்த மக்கள் பலரும் குடிதண்ணீர் பிரச்சணை உள்ளிட்ட பல பிரச்சணைகளை முன்வைத்தனர். அதனால் உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் பேசி குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் சொல்லிவிட்டு அ.தி.மு.க வுக்கு வாக்களியுங்கள் புதுக்கோட்டை நகருக்கு மட்டும் குடிதண்ணீர் பிரச்சணையை தீர்க்க சுமார் ரூ. 500 கோடி மதிப்பில் திட்டம் தயாராகி வருகிறது என்று சொல்லிவிட்டு சென்றார். 


 

 

    அதன் பிறகு செல்லும் இடங்களில் இதே போல பிரச்சனைகள் எழலாம் என்பதால் அ.தி.மு.க என்று சொல்லிக் கொண்டு மக்களை சந்திப்பதை நிறுத்திவிட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் பல துறை அதிகாரிகளையும் அழைத்துக் கொண்டு மக்களை சந்தித்து குறை கேட்கும் முகாம் என்று ஒவ்வொரு நாளும் சில கிராமங்களுக்கு சென்று மக்களிடம் மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிப்பதுடன் முதியோர் உதவித் தொகை போன்ற சிறு சிறு மனுக்களுக்கு உடனடி தீர்வுகளும் எடுக்கப்பட்டது. இதே போல உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் அ.தி.மு.க வுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது போல மக்களிடம் நேரடியாக  பேசிவிட்டு செல்கிறார்.


 

 

    ஆனால் தி.மு.க சட்டமன்றத் தொகுதிகளுக்குள் செல்லும் போது அரசு சார்பில் நடக்கும் மக்கள் சந்திப்பு குறை தீர்வு முகாம்களுக்கு  கூட அந்தந்த தொகுதி தி.மு.க எம்.எல்.ஏக்களை அழைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 
 

சில நாட்களுக்கு முன்பு திருமயம் தொகுதியில் பொன்னமராவதி உள்ளிட்ட பல இடங்களில் முகாம் நடந்தது. அதில் தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதிக்கு அழைப்பு இல்லை என்றும், அதனால் கட்சித் தொண்டர்கள், வாக்களித்த வாக்காளர்கள் மன உளைச்சலில் உள்ளனர் என்றும், அதனால் அமைச்சர் விஜயபாஸ்கரின் தூண்டுதலின்பேரில் தான் அதிகாரிகள் இப்படி ரகுபதி எம்.எல்.ஏ வை அரசு விழாக்களிலும் புறக்கணிக்கிறார்கள். மேலும் 17 ந் தேதி நடந்த 66 வது கூட்டுறவு வாரவிழா விளம்பரங்களில் தொகுதிக்கு சம்மந்தமில்லாத எம்.எல்.ஏக்கள் பெயர்களை போட்டவர்கள் தி.மு.க தொகுதி எம்.எல்.ஏக்களை அழைக்கவில்லை. பெயரும் போடவில்லை அதனால் மேலும் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன்னமராவதி, காரையூர் காவல் நிலையங்களில் தி.மு.கவினர் புகார் கொடுத்துள்ளனர். 
 

புதுக்கோட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க – தி.மு.க மோதல்கள் தொடங்கி உள்ளதால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் பெரிதாக எதிரொலிக்கும் என்கிறார்கள்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.