Published on 23/10/2019 | Edited on 23/10/2019

மேட்டூர் அணையின் 16 கண் மதகு வழியே முதல் கட்டமாக 4,500 கனஅடி உபரி நீர் திறப்பு. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளதால் 16 கண் மதகில் உபரி நீர் திறக்கப்பட்டது. தொடர்மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து 27,500 கனஅடியாக உள்ள நிலையில் ஏற்கனவே 22,500 கனஅடியாக நீர் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் வினாடிக்கு 350 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.