Skip to main content

உயிர்ம வேளாண்மை கொள்கையை அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்-உழவர் பேராளர் கூட்டத்தில் முடிவு

Published on 21/10/2022 | Edited on 21/10/2022

 

Mass demonstration demanding announcement of Bio-Agriculture Policy-Result in Farmers' Conference

 

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் தமிழக உழவர் முன்னணி ஒருங்கிணைப்பில்  தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மை கொள்கையை அறிவிக்க கோரும் செயல் திட்டம் குறித்த  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

 

கூட்டத்தில் கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலுங்கானா போன்ற பல மாநிலங்களில் அம்மாநில அரசுகள் உயிர்ம வேளாண்மை கொள்கையை (ORGANIC FARMING POLICY) அறிவித்து, இயற்கை வழி மரபு வேளாண்மையை ஊக்குவித்து வருகின்றன. அதேபோல் தமிழ்நாடு அரசும் இம்மாநிலத்திற்கு தகுந்த உயிர்ம வேளாண்மை கொள்கையை அறிவித்து செயல்படுத்த வேண்டும், தமிழ்நாட்டிற்கு ஏற்ப ஒரு உயிர்ம வேளாண்மை கொள்கை வரைவை, உருவாக்கி தமிழ்நாடு அரசுக்கு விரைவில் அனுப்பி வைப்பது,  தமிழ்நாடு அரசு விரைவில் உயிர்ம வேளாண்மை கொள்கையை அறிவிக்க வேண்டும் எனக் கோரி வரும் 2022, நவம்பர் 28 திங்கள் கிழமை காலை திருச்சியில் உழவர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது,  இந்த ஆர்ப்பாட்டத்தை “தமிழர் மரபு வேளாண்மை கூட்டியக்கம்” என்ற பெயரால் அனைத்து அமைப்புகளும் இணைந்து நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

 

Mass demonstration demanding announcement of Bio-Agriculture Policy-Result in Farmers' Conference

 

இக்கூட்டத்தில் தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன், மாநில தலைவர் சி. ஆறுமுகம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் முருகன்குடி க.முருகன், செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம் தலைமை ஒருங்கிணைப்பாளர் கரும்பு கண்ணதாசன், தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் ஒருங்கிணைப்பாளர் இரமேசு கருப்பையா, பழமலை இயற்கை வழி கூட்டமைப்பு கோட்டேரி சிவக்குமார், தாளாண்மை உழவர் இயக்கம் தா.வே.நடராசன், நம்மாழ்வார் கொள்கை பரப்பு இயக்கம் தமிழ்வேந்தன், செஞ்சோலை இயற்கை வழி வேளாண் பண்ணை  சு.அருள்ஒளி, வானகம் ஆ.இரமேசு, செல்வகுமார், மாதவன், பெரியநாயகி மரபு வழி ஒருங்கிணைந்த பண்ணை ஆ.வேலாயுதம், தமிழக உழவர் முன்னணி மா.மணிமாறன், சி.பிரகாசு, இறையூர் கணேசன், சா.வெங்கடேசன், மா.கார்த்திக், க.மணிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.