Skip to main content

வேலூர் தேர்தல் – திமுக வேட்பாளர் மாற்றமா?

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

 


வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் வாக்குபதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதற்கான காரணமாக, கதிர்ஆனந்த் வீட்டில் மற்றும் கட்சி நிர்வாகி வீட்டில் தேர்தலுக்காக வைத்திருந்த பணம் கைப்பற்றப்பட்ட 10.5 கோடியே என தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக காரணம் சொல்லப்பட்டது. இது தொடர்பாக கதிர்ஆனந்த் மீது தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

a


தற்போது கதிர்ஆனந்த்தே வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். வழக்கு நிலுவையில் உள்ளதால் அதை காரணம் காட்டி கதிர்ஆனந்த் மனுவை ரத்து செய்ய வைக்க மற்றொரு போட்டியாளரான ஏ.சி.சண்முகம் தரப்பு உட்பட சிலர் முயற்சித்து வருகின்றனர் என்கின்றனர் திமுகவினர்.


இந்நிலையில் கதிர்ஆனந்த்துக்கு மாற்றாக நிறுத்தப்படும் வேட்பாளர் தகுதியானவராக நிறுத்த வேண்டும். அதனால் மாற்று வேட்பாளரை சரியான ஆளாக போடுங்கள் என திமுக பொருளாளரும், கதிர்ஆனந்த் அப்பாவுமான துரைமுருகனிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாக செய்திகள் வெளியாகின. இந்த தகவல் கட்சியினர் மத்தியில் உலாவிவந்தன.

 

k


இந்நிலையில் ஜீலை 17ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தார் கதிர்ஆனந்த். மாற்று வேட்பாளராக கதிர்ஆனந்த் மனைவி சங்கீதாவே மனு தாக்கல் செய்துள்ளார். கதிர்ஆனந்த் மனு தள்ளுபடி செய்தால் சங்கீதாவே வேட்பாளர் என்கிறார்கள் துரைமுருகன் தரப்பில்.


கடந்த முறை தேர்தல் பிரச்சாரத்தின்போது, வருமானவரித்துறை கதிர்ஆனந்த்தை பிரச்சாரம் செய்யாமல் முடக்கியதாக கூறப்படுகிறது. அப்போது, தனது கணவருக்காக தீவிர பிரச்சாரத்தில் கவனம் செலுத்தியவர் சங்கீதா. அப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என மாவட்ட எல்லையோரம் உள்ள மக்கள் பேசும் மொழிகளிளேயே இயல்பாக பிரச்சாரம் செய்தது திமுகவினரை மட்டுமல்ல பொதுமக்களையும் வெகுவாக ஈர்த்தது. அதனால் கதிர்ஆனந்த் மனு ரத்து செய்யப்பட்டால் சங்கீதாவையே வேட்பாளராக்குங்கள் என துரைமுருகன் அவரது ஆதரவாளர்கள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

k


சட்ட வல்லுநர்களோ, தேர்தல் வழக்கு மட்டும்மே பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் விசாரணைக்கே வரவில்லை. அது விசாரணைக்கு வந்து தீர்ப்பில் தண்டனை கிடைத்தபின்பே மனு தள்ளுபடி, ஏற்பு என்கிற பிரச்சனை வரும். இப்போது வருவதற்கான வாய்ப்பில்லை என்கிறார்கள்.


ஆளும்கட்சி அதிகாரிகள் மூலமாக கதிர்ஆனந்த் மனுவுக்கு சிக்கல் ஏறுபடுத்தினால் அதற்கு வலுவான வாதங்களை வைக்க வேட்புமனு பரிசீலனையின்போது தங்கள் தரப்பின் வாதத்தை வைக்க மூத்த வழக்கறிஞர்களை அனுப்பிவைக்க முடிவு செய்துள்ளது திமுக. ஒருவேளை கதிர்ஆனந்த் மனு ரத்து செய்யப்பட்டால் கதிர்ஆனந்த் மனைவி சங்கீதாவே வேட்பாளர் என்பது உறுதியாகியுள்ளது.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

எம்.பி. கதிர் ஆனந்த காரை மறித்த கிராம மக்கள்! 

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

The villagers who blocked the MP  Kadir Ananda car!

 

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட வி.கோட்டா சாலையில், சாலை வசதி, குடிநீர் வசதி, சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்றுவது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பலமுறை அப்பகுதி மக்கள் நகராட்சி ஆணையாளர் மற்றும்  நகர்மன்ற தலைவர் பிரேமாவிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. 

 

இன்று திமுக நிர்வாகி இல்ல துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பேரணாம்பட்டு வருவதை அறிந்த அப்பகுதி மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வாகனத்தை மறித்து கோஷமிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கூறி முறையிட்டு கோஷங்களை எழுப்பினர். 

 

உடனே அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். பிறகு அங்கிருந்து எம்.பி. கதிர் ஆனந்த் புறப்பட்டுச் சென்றார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.