Skip to main content

சாராய குடும்பத்தை பிடித்து தந்த கிராம மக்கள்!

Published on 12/02/2019 | Edited on 12/02/2019
javadhu malai 01


வேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்தில் பரந்துவிரிந்துள்ள ஜவ்வாதுமலை தொடரில் கள்ளச்சாராயம் மிக பிரபலம். மலை முழுவதும் வனத்துறை மற்றும் கலால் துறையால் ரெய்டு செய்து தடுக்க முடியாத நிலையால் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாமல் தடுமாறுகிறது இந்த இரண்டு மாவட்ட காவல்துறை. 
 

அதனால், மலை கிராம மக்களிடையே கள்ளச்சாராயம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் போலிஸார். இந்த விழிப்புணர்வு பணியில் சமூக அமைப்புகளும் ஈடுப்பட்டுள்ளன. இதனால் கள்ளச்சாராயம் என்பது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்படி கட்டுக்குள் வந்த பகுதிகளிலும் தமிழக ஆளும் அதிமுக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து இது நல்லச்சாராயம் என விற்பனை செய்வது தனிக்கதை. இந்நிலையில் எச்சரிக்கையை மீறி தொடர்ச்சியாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த குடும்பத்தை காவல்துறையிடம் பிடித்து தந்துள்ளார்கள் மலைகிராம மக்கள்.
 

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலை கிராமத்தில் பல வருடங்களாக கள்ளச்சாராயம் விற்று வந்தனர் சரோஜா மற்றும் குழந்தை இருவர். இதுப்பற்றி காவல்துறைக்கு தகவல் தந்தால் வந்து பிடித்து செல்வர், பெயருக்கு வழக்கு பதிவு செய்துவிட்டு வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு எச்சரித்துவிட்டு விடுவார்கள். இதுதான் வாடிக்கையாக இருந்துவந்தது.


 

javadhu malai 01


இந்நிலையில் வெளியூர்களில் இருந்து சாராயம் குடிக்க இந்த கிராமத்துக்கு இளைஞர்கள், ஆண்கள் வருவதால் அக்கிராம மக்கள் கோபத்தில் இருந்தனர். இதற்கு முடிவுக்கட்ட பிப்ரவரி 11ந் தேதி கிராம மக்கள் ஒன்றிணைந்து, சரோஜா வீட்டுக்குள் புகுந்து அங்கு வைத்திருந்த சாராய கேன்கள், லாரி டியூப்களில் அடைத்து வைக்கப்பட்டுயிருந்த சாராயத்தை எடுத்துவந்து வீட்டுக்கு வெளியே வைத்துவிட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மக்கள் பிடித்த சுமார் ஆயிரம் லிட்டருக்கு மேலிருந்த இந்த சாராயத்தின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சத்தை தாண்டும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். 
 

ஆம்பூர் தாலுக்கா போலிஸார் உடனடியாக நாயக்கநேரி கிராமத்துக்கு சென்றனர். மக்கள் பிடித்து தந்த சாராயத்தையும், சாராயம் விற்பவர்களையும் கைது செய்துக்கொண்டு காவல்நிலையம் வந்தனர். அவர்களிடம் இன்னும் எங்காவது சாராயம் பதுக்கி வைத்துள்ளார்களா?, சாராயம் காய்ச்சி தங்களுக்கு விற்பனை செய்வது யார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

கடையில் புகுந்து திருட முயன்ற நபர்; பெண் ஊழியர்களின் செயலால் பதறியடித்து ஓட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Female employees who were beaten with a whip on Mysterious person who tried to steal

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே ‘குடியாத்தம் பலகாரம்’ என்ற பெயரில் தின்பண்ட கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில், முழுவதும் பெண் ஊழியர்களே பணியாற்றி வருகின்றனர். இந்தக் குடியாத்தம் பலகார கடைக்கு அருகிலேயே மற்றொரு கடை ஒன்று உள்ளது. பெண்கள் அங்கும் சென்று பணியாற்றுவார்கள், அங்குள்ள பெண்கள் இங்கும் வந்து பணியாற்றுவார்கள்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (27-04-24) பெண் ஊழியர்கள் அருகில் உள்ள அவர்களது மற்றொரு கடைக்கு சென்று இருந்தனர்.  சில பெண்கள், கடை மாடியில் இருக்கும் பொருட்களை எடுக்கச் சென்றனர். அப்போது கல்லாவில் யாரும் இல்லாத நிலையில், மர்ம நபர் ஒருவர் கடைக்குள் புகுந்து கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தைத் திருட முயன்றார்.

அப்போது, கடைக்குள் வந்த இரண்டு பெண் ஊழியர்கள் திருட வந்த மர்ம நபரை அங்கிருந்த துடப்பத்தால் அடித்து அங்கிருந்து விரட்டி அடித்தனர். இந்தச் சம்பவம், அங்குள்ள சி.சி.டி.வி கேமாராக்களில் பதிவாகியுள்ளன. இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில், கடையில் திருட வந்த அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடைக்குள் திருட வந்த மர்ம நபரை, பெண் ஊழியர்கள் துடப்பத்தால் அடித்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.