Skip to main content

போலிஸாரோடு சென்ற ஆசிரியை லாட்ஜில் உயிரிழப்பு; தற்கொலையா? கொலையா? ;பரபரப்பாகும் மயிலாடுதுறை!

Published on 18/08/2019 | Edited on 18/08/2019

திருச்சி சிறைத்துறை காவலர் ராஜ்குமாருக்கும் தனியார் பள்ளி ஆசிரியை சித்ராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணதிற்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் ஆசிரியை தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார்கோயில் மகாராஜபுரத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் சித்ரா. 30 வயதான இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். அவருக்கும் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா சிறுபுலியூரைச் சேர்ந்த துரைசாமி மகன் ராஜ்குமார் என்பவருக்கு திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். ராஜ்குமார் தமிழ்நாடு சிறப்பு காவல்படை திருச்சி நம்பர் ஒன் பட்டாலியனில் இருந்த அவர் தற்போது மத்திய சிறை காவலராக பணியாற்றி வருகிறார்.

 

incident in mailatudurai;police investigation


இருவருக்கும் கடந்த மாதம் நிச்சயம் முடிந்து இன்னும் நான்கு நாட்களில் கொல்லுமாங்குடியில் திருமணம் நடக்க இருக்கிறது.

இந்தநிலையில் திருமணம் செய்து கொள்ளக்கூடிய இருவரும் செல்போனில் அடிக்கடி பேசியும், சண்டைப்போட்டும், சண்டையோடு அடிக்கடி வெளியில் சுற்றிக்கொண்டும் இருந்துள்ளனர். சித்ராவின் வீட்டிற்கு ராஜ்குமார் அடிக்கடி வருவதும், சித்ராவை அழைத்துக்கொண்டு ஒன்றாக ஊர் சுற்றுவதும் வாடிக்கையாகவே இருந்துள்ளார். அந்த வழக்கத்தில் சுதந்திர தினத்தன்று ராஜ்குமார் சித்ரா வீட்டிற்கே சென்று சித்ராவை அழைத்துக்கொண்டு வேலைப்பார்க்கும் திருச்சிக்கு சென்று அங்குள்ள மாநகராட்சி லாட்ஜில் இருவரும் தங்கியுள்ளனர். மறுநாள் காலை சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறி சித்ராவின் உடலை ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்துச்சென்று பெண் வீட்டில் கொடுத்திருக்கிறார். இதைக்கண்ட அவரது பெற்றோர்கள் பதட்டமடைந்து வீதியில் விழுந்து புரண்டனர்.

சித்ராவின் இறப்பில் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்களும், கிராமத்தினரும் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் செம்பனார்கோவில் போலீசார் சித்ராவின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் நடந்தது திருச்சி கண்டோன்மென்ட் பகுதி என்பதால் கண்டோன்மென்ட் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அழகர் தலைமையில் போலீசார் மயிலாடுதுறை வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

incident in mailatudurai;police investigation

 

இதுகுறித்து மகாராஜபுரம் சேர்ந்த அவரது உறவினர்கள் கூறுகையில்,"  ஆரம்ப முதலே அந்தப்பெண்ணுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் கிடையாது. சித்ரா வேறு ஒரு பையனை திருமணம் செய்ய நினைத்து காதலித்திருக்கிறார். அதை தெரிந்தே சித்ராவின் அம்மா இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். நிச்சயம் முடிந்ததிலிருந்து ராஜ்குமாரக்கும், சித்ராவிற்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. சித்ராவை மனமாற்றம் செய்யவும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும்தான் திருச்சிக்கு அழைத்து சென்றுள்ளார்ராஜ்குமார். லாட்ஜ் அறையில் தனியாக விட்டுவிட்டு பணிக்கு போய்ட்டதா சொல்லுறாங்க, அப்படின்னா தனியா இருக்கும்போது ஏற்பட்ட மன அழுத்த விரக்தியால சித்ரா தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது சித்ரா விரும்பிய பையனால் நடந்ததா, அல்லது ராஜ்குமாரை கொன்றுவிட்டு நடிக்கிறாரா என்பது புரியல.  திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் நடைபெற்ற சம்பவத்தை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்காமல். 120 கிலோ மீட்டர் தூரம்  இருக்கும் சித்ரா விட்டிற்கு உடலை கொண்டுவந்தது ஏன்னு புரியல. சித்ராவின் சாவு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துது, நியாயம் தெரியனும்." என்கிறார்கள்.

சித்ராவின் மரணத்திற்கு ராஜ்குமாரின் டார்ச்சரா, வேறு நபரால் இந்த மரணம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் கண்டோன்மெண்ட் போலீசார்  விசாரணை மேற்கொண்டுள்ளனர். சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர். பரிசோதனை முடிவு வெளிவந்த பிறகே பல உண்மைகள் தெரியவரும் என்கிறது போலீஸ் தரப்பு.

 

.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.