Skip to main content

கோவையில் தொழிலாளிகளின் கண்முன்னே முதலாளியை வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

இரண்டு லட்சம் ரூபாய் பணம், அவர் அணிந்திருந்த எட்டு பவுன் நகைகள் மற்றும்  மூன்று கார்களை திருடிக்கொண்டு, கண்காணிக்காப்புக் கேமிரா காட்சிகளையும் அழித்துவிட்டு சென்ற  ஐந்து பேர் கொண்ட கும்பலை போலீசார் வலை வீசித்தேடி வருகின்றனர்.

 

murder

 

கோவை பீளமேடு பகுதியைச்சேரந்தவர் பரந்தாமன்(36). கோவை போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடை வைத்து நடத்துவபவரான இவர் கார்கள் வாங்கி விற்கும் தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று (18-04-2019) காலை பாப்பநாயக்கன் பாளைத்திலுள்ள வாக்குசாவடியில் வாக்களித்து விட்டு தனக்கு சொந்தமான  போத்தனூர் பகுதியல் இயங்கி வரும் தனது அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
 

சுமார் 11 மணி அளவில் பரந்தாமன் அலுவலகத்திலும், ஒரு பெண் தொழிலாளி மற்றும் இரு ஆண் தொழிலாளர்களும் வழக்கம் போல்  வேலை செய்து கொண்டிருக்கும் போதுதான் அந்த கொடூர சம்பவம் அரங்கேறியது.
 

காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களின் கழுத்தில் கத்தியை வைக்கவே தொழிலாளர்கள் பயத்தில் ஒரு அறையினுள் ஓட்டம் பிடித்தனர்.
 

அந்த அறையின் கதவை மூடிய கும்பல் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டிருந்த பரந்தாதமனை சுற்றி வலைத்து தொழிலாளர்களின் கண்முன்னே அவர்கள் கொண்டு வந்த அரிவாளால் சரமாரியாக தாக்கினர். இதில்  பரந்தாமன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். அங்கிருந்த இரண்டு லட்சம் ரூபாய் பரந்தாமன் அணிந்திருந்த எட்டு பவுன் நகைகளை கொள்ளையடித்த கும்பல் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை அழித்துவிட்டு அங்கு  நிறுத்தப்பட்டிருந்த மூன்று  கார்களையும் ஓட்டிக்கொண்டு தப்பி சென்றனர்.
 


இதனையடுத்து தொழிலாளர்களின் அலரல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத்தொடரந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போத்தனூர் காவல் துறையினர் மற்றும் மாநகர துணை காவல் ஆணையர்  கொலையான பரந்தாமனின் உடலை மீட்டு பிரேத பிரசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 

சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வரும் போலீசார் கொலைக்கு முன்விரோதம் காரணமாக? அல்லது தொழில்போட்டியா? கொடுங்கல் வாங்கல் பிரச்சனையா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

மேலும் மாவட்ட உதவி கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
 

தமிழகத்தில் தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும் சமயத்தில் கோவையில் தொழிலாளிகளின் கண்முன்னே முதலாளியை வெட்டி கொலை செய்து விட்டு மூன்று கார்களை கொள்ளைஅடித்த சம்பவம் பெரும் அதிரச்சியையும் பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.