Skip to main content

கடன் பிரச்சனையால் கணவன் எஸ்கேப்... அப்பாவி மனைவிக்கு நேர்ந்த பரிதாப நிலை!

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

தான் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லையென்றால் என்ன செய்யலாம்? அதற்காக இந்த செந்தில்குமார் செய்ததை போல் செய்யக் கூடாதுங்க என பரிதாபமாக கூறுகிறார்கள் ஈரோட்டு மக்கள். 

ஈரோடு சின்னசடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்  செந்தில்குமார். ஸ்பின்னிங் மில் ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இவரது மனைவி சங்கீதா, இவர்களுக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். செந்தில்குமார்  ஸ்பின்னிங் மில்லை நடத்த சிரமப்பட்டு பணப் பிரச்சனையால் அவருக்கு தெரிந்தவர்களிடம் தொடர்ந்து  கடன் அதிகம் வாங்கியிருந்தார். 

 Husband escape due to debt problem..Pity for the innocent wife!


ஒரு கட்டத்தில் தொழில் நஷ்டம் அடைந்தது. வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் ஒரு முடிவு செய்து மனைவி மகனை வீட்டிலேயே விட்டுவிட்டு  கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பே வீட்டை விட்டு எங்கேயோ சென்றுவிட்டார். ஆனால் கடன் கொடுத்தவர்கள் சும்மா இருப்பார்களா? மனைவி சங்கீதாவிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். அந்தப் பெண்ணும் வீட்டை விட்டு போன கணவர் திரும்பி வந்து விடுவார் உங்கள் பணத்தை கொடுத்து விடுவோம் என நம்பிக்கையாக கூறி வந்துள்ளார். ஆனால் மூன்று வருடம் கழித்தும் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கணவன் வாங்கிய கடன் தொல்லையால் மனைவி சங்கீதா மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து  வந்துள்ளார். 

இந்நிலையில், தொடர் மனவேதனையில் இருந்த சங்கீதா நேற்று வீட்டில் தற்கொலைக்கு முடிவை நாடினார். அவர் வீட்டருகே இருந்த அக்கம்பக்கத்தினர் அப்பெண்னை மீட்டு ஈரோடு அரசு  ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு  சென்றனர். ஆனால் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, ஏற்கனவே இவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

தொழில் நடத்த கணவன் வாங்கிய கடன் கணவனை எங்கோ எஸ்கேப்பாக வைத்துவிட்டு அப்பாவி பெண்னின் உயிரை பழிவாங்கிய சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.