Skip to main content

திரௌபதி படத்தை ஆம்பூரில் திரையிட வேண்டாம்... விசிக மனு...!

Published on 09/01/2020 | Edited on 09/01/2020

திரௌபதி திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. சமீபத்தில் அதன் முன்னோட்ட காட்சிகள் வெளியிடப்பட்டன. அதில் அளவுக்கு அதிகமாக சாதி தாக்குதல் உள்ளதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

 

Draupadi movie issue

 



இந்த திரைப்படம் வெளிவந்தால் சாதி மோதல்கள் ஏற்படும் என பல தரப்பினரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இப்படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரில் ஒன்பது திரையரங்குகள் உள்ளன. இந்த திரையரங்குகளில் திரௌபதி திரைப்படத்தை திரையிட வேண்டாம் என்று திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களை சந்தித்து ஆம்பூர் பகுதி விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் சந்திரன், ஆம்பூர் நகர செயலாளர் சக்தி, ஆம்பூர் நகர அமைப்பாளர் வெங்கடேசன், மாவட்ட  தலைவர் யுவராஜ், ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் மனு கொடுத்துள்ளனர்.

 

Draupadi movie issue

 



அதேபோல் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தத்தை சந்தித்தும் மனு தந்துள்ளனர். இதனால் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடரும் மர்மம்; மூன்று மாதத்தில் நான்கு இளம் நடிகைகள் மரணம்!  

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
sophia leone passed away

ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த சோபியா லியோன். 26 வயதான சோபியா லியோன், தனது 18வது வயதிலிருந்தே ஆபாச படங்களில் நடித்துவந்தார். இவர் அமெரிக்க மாடலிங் ஏஜென்ஸியான ‘101 மாடலிங் இங்க்’ நிறுவனத்தின் மூலம் அறிமுகமானா சில காலத்திலேயே பிக் ஸ்டாராக உருவெடுத்தார். படங்களில் நடிக்க தொடங்கிய 9 ஆண்டுகளில் அவரின் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலராக உயர்ந்தது.

இந்த நிலையில், கடந்த 1 ஆம் தேதி நியூ மெக்சிகோவில் உள்ள அல்புகர்கி பகுதி அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வந்த சோபியா லியோனை அவரது குடும்பத்தினர் தொடர்புகொண்டனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக சோபியா லியோன் தங்கிருந்த இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு மயக்கநிலையில் கிடந்த சோபியா லியோனை பார்த்து அதிர்ச்சியந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சோபியா லியோன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த 9 ஆம் தேதி நிதி திரட்டும் சமூக வலைதளமான ‘கோ ஃபன்ட் மீ’ வலைதளத்தில் சோபியா லியோன் வாளர்ப்பு தந்தை மைக் ரொமேரோ, “சோபியாவின் இறந்த செய்தியை நான் ஒரு கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். அவரின் இழப்பு எங்களுக்கும், அவரின் ரசிகர்களுக்கும் பேரிழப்பு..'' என பதிவிட்டுள்ளார். மேலும் அவரது இறுதி சடங்கிற்கு நிதி திரட்டும் அறிவிப்பையும் வெளியிட்டார். முதலில், சோபியாவின் இறுதி சடங்கிற்கு 12,000 டாலராக இலக்கு தொகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 5,725 டாலர் சேர்த்து உயர்த்தப்பட்டது. 

இதனிடையே, நடிகையின் மரணம் குறித்து பேசிய அதிகாரி ஒருவர், “Albuquerque homicide detectives மூலம் நடிகையின் மரணம் பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும், நடிகை மரணத்தில் மர்மம் இருப்பதாகவும்” அந்நாட்டு ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். குடும்பத்தினர் தரப்பிலும் சோபியா லியோனின் மரணம் தற்கொலை இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகை இறப்பு செய்தி வெளியானதில் இருந்து அவருக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவர் கடைசியாக கொடுத்த பேட்டி மற்றும் நடித்த படங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் சோபியாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், தீர விசாரணை செய்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கடந்த 3 மாதங்களில் கேக்னே லின் தாய்னா ஃபீல்ட்ஸ்(24), கார்ட்டர்(36), ஜெஸ்ஸி ஜேன்(43) ஆகிய  மூன்று ஆபாச பட நடிகைகள் அடுத்தடுத்து மரணம் அடைந்த நிலையில், தற்போது 4ஆவதாக சோபியா லியோன் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், தைனா ஃபீல்ட்ஸ் முன்னதாக ஆபாச திரைப்படத் துறையில் பாலியல் அத்துமீறல் நடப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிர்வலைகளை எழுப்பி இருந்தார். அதன் பிறகே அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மூன்று பேரின் மரணத்திலும் சந்தேகம் இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது நடிகை சோபி லியோன் மரணம் அடைந்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குணா குகையும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படமும்

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
manjummel boys real gunaa cave incident history

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியாகியுள்ள இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். குணா குகையில் நடக்கும் கதை என்பதால் கமல் நடித்த குணா பட பாடல் ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடலை படக்குழு படத்தில் பயன்படுத்தியுள்ளது. இதுவரை 7 நாட்களில் ரூ. 50 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய நாட்களில் ரூ. 50 கோடி வசூலித்த மலையாள படங்களில் ஒன்றாக இப்படம் பேசப்படுகிறது.

இந்த சூழலில் படத்திற்கு அமைச்சர் உதயநிதி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர். இதையடுத்து குணா குகை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில், குணா குகை பற்றி சில சுவாரசியமான தகவல்கள் பின்வருமாறு. 1821 ஆம் ஆண்டு பிரிட்டனை சேர்ந்த அதிகாரி பி.எஸ். வார்ட் குணா குகையைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. பின்பு குணா படத்தின் ‘கண்மணி அன்போடு காதலன்...’ என்கிற பாடல் உள்பட சில காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது. பின்பு 1991 ஆம் ஆண்டு குணா படம் வெளியானதை தொடர்ந்து, அந்த பாடல் ஹிட்டடிக்க அந்த குகை சுற்றுலா தலமாகவே மாறியது. மேலும் குணா குகை என்றே அந்த குகைக்கு பெயரிடப்பட்டது. இன்றளவும் அவ்வாறே அழைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னால் வெள்ளைக்காரர்களால் சாத்தான்களின் சமையலறை (Devils Kitchen) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 13க்கும் மேற்பட்டோர் அந்த குகையில் உள்ள குழியில் விழுந்து காணாமல் போயுள்ளனர். ஆனால் யாருமே மீட்கப்படவில்லை. 

manjummel boys real gunaa cave incident history

இதையடுத்து 2000 முதல் 2016 ஆம் ஆண்டு வரை அந்த பகுதிக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் 2006 ஆம் ஆண்டு கேரளாவிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் இளைஞர்கள் குணா குகையை பார்வையிடும் போது, அனுமதி மறுக்கப்பட்ட அந்த ‘சாத்தான்களின் சமையலறை’ குகைக்குள் சென்றுள்ளனர். அப்படி செல்லும்போது, சுபாஷ் (25) என்ற இளைஞர் எதிர்பாராத விதமாக ஒரு குழியில் விழுந்துள்ளார். அவரை மீட்க அப்பகுதிக்குட்பட்ட காவல்துறையினர் உள்ளிட்ட குழுவினர் முயற்சி செய்கின்றனர். விழுந்தவரை காப்பாற்ற அந்த நண்பர்கள் குழுவில் இருந்த சசி என்பவரே இறக்கப்படுகிறார். 5 மணி நேரத்திற்குப் பிறகு சுபாஷை மயங்கிய நிலையில் மீட்டு விடுகிறார். அந்த அபாயகரமான குகையில் விழுந்து மீட்கப்பட்ட முதல் நபராக சுபாஷ் இருந்துள்ளார். மேலும் சசியின் துணிச்சலை பலரும் பாராட்டியுள்ளனர். மேலும் அந்த குகையில் இருந்த மீட்கப்பட்ட முதல் நபர் என்ற சாதனையை அந்த இளைஞர்கள் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தால் மீண்டும் குணா குகை பற்றிய தேடல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்த குணா குகை 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. ஆனால், உண்மையான குணா குகைக்கு செல்லும் பாதை மூடப்பட்டு அதன் மேற்பரப்பு மட்டுமே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படுகிறது.