Skip to main content

திமுக மறியல், மண்டை காய்ந்த போலிஸ் – இறங்கிவந்த ரயில்வே துறை!

Published on 05/04/2018 | Edited on 05/04/2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய பாஜக அரசையும், மாநிலத்தை ஆளும் அதிமுக அரசையும் கண்டித்து திமுக தனது கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து தொடர் போராட்டம் நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று ஏப்ரல் 5ந்தேதி தமிழகத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது திமுக. அதிமுக, பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம், போளுர், ஆரணி, வந்தவாசி, செய்யார் போன்ற நகரங்கள், பேரூராட்சிகளில் 95 சதவிதம் கடைகள் அடைக்கப்பட்டு முழு கடையடைப்பு பெரும் வெற்றி பெற்றுள்ளன. பேருந்துகள் 10 சதவிதம் மட்டுமே இயக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரி பேருந்துகள் மட்டும் வழக்கம் போல் இயங்கின.

 

thiruvannamalai protest

காலை 8 மணிக்கு திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து திமுக மா.செவும், முன்னால் அமைச்சருமான எ.வ.வேலு,எம்.எல்.ஏ தலைமையில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், தமுமுக உட்பட பல கட்சிகள் ஊர்வலமாக சென்று திருவண்ணாமலை இரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தினர்.

இரயில் நிலையத்தின் இரண்டு நுழைவாயில்கள் மூடப்பட்டு மாநில காவல்துறை மற்றும் இரயில்வே போலிஸார் பாதுகாப்புக்கு நின்றிருந்தனர். அவர்களை ஒதுக்கி தள்ளிவிட்டு ரயில் நிலையத்துக்குள் புகுந்த கட்சியினர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்தனர். இதனால் காட்பாடியில் இருந்து விழுப்புரம் செல்ல வேண்டிய பயணிகள் இரயில் போளுருக்கும் – திருவண்ணாமலைக்கும் இடையே நிறுத்தப்பட்டது.

 

thiruvannamalai protest1


இரயில் வந்தால் தான் இங்கிருந்து நகருவோம் என முரண்டு பிடித்தனர் திமுகவினர். திருவண்ணாமலை இரயில்வே அதிகாரிகள், இரயிலை இயக்கி அசம்பாதவிதம் ஏதாவது ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்வது அதனால் இரயிலை இயக்க முடியாது என்றனர். மாநில போலிஸார் என்ன செய்வது எனத்தெரியாமல் முழித்தனர். பின்னர் திருவண்ணாமலை ஏ.டி.எஸ்.பி ரங்கராஜன் சம்பவயிடத்துக்கு வந்து, திமுக பிரமுகர்களிடம் பேசிவிட்டு, ரயில்வே அதிகாரிகளிடம் சென்று நீங்க இரயிலை வரச்சொல்லி தகவல் தந்துடுங்க. இரயிலுக்கு எந்த சேதமும் ஏற்படாது. அவுங்க இரயில் மறியல் போராட்டம் செய்துட்டு கலைந்து போய்டுவாங்க என வாக்குறுதி தந்தார். நீண்ட நேர ஆலோசனைக்கு பின்பு ரயில்வே அதிகாரிகள் இரயிலை இயக்க ஒப்புக்கொண்டனர். அதன்பின்பு 1 மணி நேரம் கழித்து வழியில் நிறுத்தப்பட்ட இரயில் திருவண்ணாமலை ரயில்வே நிலையத்துக்கு வந்தது.

 

tvmalai


ரயில்வே பாதையில் அமர்ந்திருந்த திமுக உட்பட எதிர்கட்சியினர் இரயில் முன் நின்று 10 நிமிடம் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். அப்போது இரயில் ஓட்டுநர் ஹாரன் அடிக்க மறியலில் ஈடுப்பட்டவர்கள் கோபமாகிவிட்டனர். அவர்கள் இரயிலை கோபத்தில் தட்டினர். போலிஸார் உடனே அனைவரையும் கைது செய்தனர். அதன்பின் ஒன்னரை மணி நேர தாமதத்துக்கு பின் இரயில் புறப்பட்டு விழுப்புரம் சென்றது.

5 பேருந்துகளில் திமுகவினர் உட்பட எதிர்கட்சியினரை கைது செய்து அழைத்து சென்றனர் போலிஸார். இதில் மகளிர்க்க என தனியாக ஒரு பேருந்தை ஒதுக்கி அதில் அழைத்து சென்றனர். அதற்கு மேல் கைது செய்யப்பட்டவர்களை ஏற்றிச்செல்ல பேருந்துகள் இல்லாததால் 300க்கும் அதிகமான இருசக்கர வாகனத்தில் கட்சியினர் கைதாகி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் சென்றனர். கைதானவர்களை தனியார் மண்டபத்தில் தங்கவைத்துள்ளது காவல்துறை.

திருவண்ணாமலை நகரில் மட்டும் பெண்கள் உட்பட 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் என்பது குறிப்பிடதக்கது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 15 ஆயிரம் பேர் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அதில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.