Skip to main content

அங்கன்வாடி அருகே ஆபத்தான பாழடைந்த கிணறு –நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் ஒன்றியம் விண்ணமங்கலம் ஊராட்சி காட்டுக்கொல்லை கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. அந்த அங்கன்வாடி மையத்திற்கு, 1997 – 98 ஆம் ஆண்டில் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சத்துணவு  கூடம் கட்டி தரப்பட்டது.

 

Dangerous well near Anganwadi - People request to take action!

 

கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைய வளாகத்தில் சுமார் 60 அடி ஆழ பொதுக்கிணறு ஒன்று இருந்து வருகிறது. ஆரம்பகாலக்கட்டத்தில் அங்கு ராட்டினம் போட்டு தண்ணீர் சேந்தி பெண்கள் குடங்களில் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் கிணற்றில் தண்ணீர் இல்லாததால் வறண்டு போனது.

அதோடு, பின்னர் மழை பெய்து செடிகள், மரங்கள் என அந்த கிணற்றை சுற்றியும், கிணற்றுக்குள்ளும் வளர்ந்துவிட்டது. கிணற்றுக்குள் மண்கள் குவிந்துள்ளது. தற்போது அங்கு செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் சுமார் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். குழந்தைகள் அங்கன்வாடிக்குள்ளும், வெளியேவும் விளையாடுகின்றனர். அவர்கள் அந்த பாழடைந்த கிணற்று பக்கமும் சென்று விளையாடுகின்றனர்.

இதனால் அங்கன்வாடி ஊழியர்கள் பாதுகாப்பாக கண்காணித்தாலும், அதனையும் மீறி குழந்தைகள் அந்தப்பக்கம் சென்றுவிடுகின்றனர். இதனால் ஊழியர்கள் பயத்திலேயே உள்ளனர். இதனை அறிந்த அக்கிராம பொதுமக்களும் அங்கன்வாடி பின்புறம் உள்ள இந்த கிணற்றை உடனடியாக மூடவோ அல்லது அதனை சீர் செய்து சுற்றிலும் கருங்கல் சுவற்றை கட்டி குழந்தைகள் எட்டி பார்க்காத வண்ணம் செய்ய, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

கடையில் புகுந்து திருட முயன்ற நபர்; பெண் ஊழியர்களின் செயலால் பதறியடித்து ஓட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Female employees who were beaten with a whip on Mysterious person who tried to steal

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே ‘குடியாத்தம் பலகாரம்’ என்ற பெயரில் தின்பண்ட கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில், முழுவதும் பெண் ஊழியர்களே பணியாற்றி வருகின்றனர். இந்தக் குடியாத்தம் பலகார கடைக்கு அருகிலேயே மற்றொரு கடை ஒன்று உள்ளது. பெண்கள் அங்கும் சென்று பணியாற்றுவார்கள், அங்குள்ள பெண்கள் இங்கும் வந்து பணியாற்றுவார்கள்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (27-04-24) பெண் ஊழியர்கள் அருகில் உள்ள அவர்களது மற்றொரு கடைக்கு சென்று இருந்தனர்.  சில பெண்கள், கடை மாடியில் இருக்கும் பொருட்களை எடுக்கச் சென்றனர். அப்போது கல்லாவில் யாரும் இல்லாத நிலையில், மர்ம நபர் ஒருவர் கடைக்குள் புகுந்து கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தைத் திருட முயன்றார்.

அப்போது, கடைக்குள் வந்த இரண்டு பெண் ஊழியர்கள் திருட வந்த மர்ம நபரை அங்கிருந்த துடப்பத்தால் அடித்து அங்கிருந்து விரட்டி அடித்தனர். இந்தச் சம்பவம், அங்குள்ள சி.சி.டி.வி கேமாராக்களில் பதிவாகியுள்ளன. இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில், கடையில் திருட வந்த அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடைக்குள் திருட வந்த மர்ம நபரை, பெண் ஊழியர்கள் துடப்பத்தால் அடித்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.