Skip to main content

"சினிமா கொட்டகையில் இடைவேளை நேரத்தில் முறுக்கு விற்பார்"- நடிகர் கருணாஸ் குறித்து நண்பர்கள் நெகிழ்ச்சி! 

Published on 13/06/2022 | Edited on 13/06/2022

 

"Cinema barn sells Murukku at break time" - Friends flexibility about actor Karunas!

 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 1975 முதல் 1980- ஆம் ஆண்டு வரை  ஒன்றாம் வகுப்பிலிருந்து முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்த மாணவ, மாணவிகளின் ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று (12/06/2022) நடந்தது.

 

சுமார் 42 ஆண்டுகளுக்கு பிறகு பழைய சிறுவயது நண்பர்களை, தோழிகளைச் சந்திக்க குடும்பத் தலைவிகளாக, விவசாயிகளாக, தொழிலதிபர்களாக, திரைத்துறை பிரபலங்களாக எனப் பல்வேறு துறைகளில் ஜொலிக்கும் 60 க்கும் மேற்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 42 வருடங்களுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட நண்பர்கள் பலரும், மலரும் நினைவுகளை கூறி ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். பலர் கட்டியணைத்து மகிழ்ந்தனர்.

 

அப்போது, அவர்கள் கூறியதாவது, "இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் ரொம்பவே மகிழ்வாக இருந்தார். கருணாஸ் சினிமா கொட்டகையில இடைவேளை நேரத்தில் முருக்கு விற்பார். பள்ளி தோழிகள் வந்தால் வெட்கப்பட்டு ஓரமாக போனாலும், தோழிகள் அவர்களின் பாட்டிகளிடம் சொல்லி முறுக்கு வாங்கி திண்போம்" என்றனர். இப்படி ஒவ்வொருவராக தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். 

 

நடிகர் கருணாஸ் கூறுகையில், "நமக்கு ஆயிரம் நண்பர்கள் இருந்தாலும், பள்ளி, கல்லூரி நண்பர்களைப் போல வராது. சினிமாவுக்கு எதிராக, அரசியலுக்கு எதிராக, சாதிக்கு எதிராகப் பேசிய நான் அதற்குள்ளாகப் போகும் சூழ்நிலை ஏற்பட்டது. எதையும் நானாக விரும்பி போகவில்லை. வந்ததை ஏற்றுக் கொண்டேன். வந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வாய்ப்பை உருவாக்கி கொள்ள வேண்டும்" என்றார்.

 

அப்போது ஆசிரியர்களாக இருந்து பாடத்தை மட்டுமின்றி ஒழுக்கத்தையும் கற்பித்த ஆசிரியர்கள் சுப்பிரமணியன், ராமையன், சொக்கலிங்கம் ஆகியோருக்கு மாலை, சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினர். விருந்து உபசரிப்புகளுடன் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

 

நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் கருணாஸ், "குருவிக்கரம்பை அரசு தொடக்கப் பள்ளியில் 1980- ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு படித்தேன். என் அப்பா இங்கு தான் டீக்கடை நடத்தினார். அந்த காலகட்டத்தில் எங்களுடன் படித்த மாணவ, மாணவிகள் தற்போது வேறு வேறு துறைகள், வெவ்வேறு ஊர்களில் இருக்கிறோம். நீண்ட நாட்களாகவே நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சந்திக்க வேண்டும். பள்ளிப் பருவ நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டோம். 

 

எங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களை சந்தித்தோம். அவர்கள் எங்களுடைய சுட்டியான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்; மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் பள்ளியை நானும் என்னுடன் படித்த மாணவ மாணவிகளும் தத்தெடுத்து பராமரிக்க முடிவு செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார். 

 

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் கருணாஸ், "திரைப்படத்துறையில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால், அரசியலிலிருந்து ஓய்வு பெற்றதாக அர்த்தம் இல்லை. எனக்கான தொழில் சினிமாதான். அரசியல் எனக்கு தொழில் கிடையாது. எனக்கு நிறைய வாய்ப்புகள் வருவதால், தற்போது சினிமாவில் நடித்து வருகிறேன். நான் சினிமாவில் பிசியாக இருப்பதால் அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. அதனால் ஒதுங்கி இருப்பதாக தோன்றுகிறது" என்றார்.  

 

சசிகலா அ.தி.மு.க. வுக்கு வந்தால் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். கூறுகின்றனரே என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள நடிகர் கருணாஸ், "தொழிலாளியாக இருந்தவர்கள் முதலாளி ஆகிவிட்டால், மீண்டும் தொழிலாளியாக விரும்ப மாட்டார்கள். இது உலக நியதி. அப்படித்தான் தொழிலாளியாக இருந்த இ.பி.எஸ், ஓ.பி.எஸ் முதலாளியாக மாறினார்கள். எனவே ஒரு முதலாளியிடம் எப்படி தொழிலாளியாக வேலை செய்வார்கள்" என கேள்வி எழுப்பினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இவர்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே போதுமானது'' - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு 

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

"It is enough that the Dharmapura Adheena Kurumaka Sannithans support us" - Principal M.K.Stal's speech

 

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் 75 வது பவளவிழாவின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் பேசிய தமிழக முதல்வர், 'ஆலயங்களில் அன்னைத் தமிழ்; மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கோயில் நகைகள் மீட்பு; அறநிலையத்துறை சார்பில் 10 கலை கல்லூரிகள்; கோவில் திருப்பணிகளை ஒருங்கிணைக்க குழு; இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள பழமையான கோவில்களை பழமை மாறாமல் சீர் செய்து குடமுழுக்கு நடத்த உத்தரவு; திருக்கோவில் பணிகள் மேற்கொள்ள மண்டல மாநில அளவிலான வல்லுநர் குழு; தற்போது வரை 3,986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக வல்லுநர் குழுவால் அனுமதி; ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான வரலாற்று சிறப்புமிக்க நூற்றுப் பன்னிரண்டு திருக்கோவில்களை பழமை மாறாமல் சீர் செய்ய 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு என இந்த நிதியாண்டில் மட்டும் 5,078 திருக்கோவில்களின் திருப்பணிகள் மூலம் இந்து சமய அறநிலையத்துறையைக் காத்து வரும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. இதனை மக்கள் அறிவார்கள். அறிவது மட்டுமல்ல வாழ்த்திக்கொண்டும் இருக்கிறார்கள்.

 

நீதிபதிகளே அறநிலையத்துறைக்கு நாம் ஆற்றும் பணிகளைப் பார்த்து வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ்நாடு என்ற மாநிலம் காப்பாற்றப்பட வேண்டும். வீர முத்துவேல் போன்ற அறிவியலாளர்களை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். அனைவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்ற நோக்கத்தோடு செயல்படுவதற்கான உணர்வை தர வேண்டும். மாணவர்களின் பசியாற்றும் காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. அப்படி விரிவாக்கம் செய்யப்படக்கூடிய திட்டத்தை கலைஞர் படித்த திருக்குவளை பள்ளியில் இருந்து நான் தொடங்கி வைத்திருக்கிறேன். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் ஏக்கத்தைப் போக்கும் வகையிலான மக்களுக்கான திட்டம் தான் காலை உணவுத் திட்டம். அனைத்து நன்மைகளும் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது என்ற ஒரு கூட்டம் தான் எங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுகிறது. அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. தர்மபுர ஆதீனம் போன்ற நல்லிணக்கத்தை விரும்பும் சகோதரத்துவத்தை விரும்பும் குருமகா சன்னிதானங்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே எங்களுக்குப் போதுமானது'' என்றார்.

 

 

Next Story

கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டி; பரிசுகளை வழங்கிய முதல்வர் 

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

Artist Centennial Speech Contest Chief Minister who presented the prizes

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் ‘தலை நிமிரும் தமிழகம்’ என்ற தமிழகத்தின் விடியலுக்கான முழக்கத்தைக் கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாகத் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், தமிழகத்திலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரிகளின் மாணவ, மாணவியருக்காகத் தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டிகளை நடத்தியது. கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பாடத்திட்டங்களுக்கு அப்பால், மாணவர்கள் அறிந்தும், உணர்ந்தும், தெளிய வேண்டிய உன்னத விழுமியங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கவும், தமிழ்ச் சமூகத்தின் தனித்துவமான பண்பாடுகளை, பெருமைகளை, இலக்கியங்களை, கலைகளை, வரலாற்றை மாணவர்கள் அறிந்துகொள்ளும் விதமாகவும், தமிழகத்தின் 38 மாவட்டங்களில் நடத்தப்பட்ட இப்பேச்சுப் போட்டிகளில் 4,000 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

 

ஒவ்வொரு மாவட்டத்திலும், தமிழிலும், ஆங்கிலத்திலும் தனித்தனியாகப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு தலா ரூ.20,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000 ஆகிய பரிசுகளும், மாநில அளவில் தமிழிலும், ஆங்கிலத்திலும் தனித்தனியாகப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு தலா ரூ.1,00,000, ரூ,50,000 மற்றும் ரூ.25,000 ஆகிய பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. மாவட்ட அளவில் 228 மாணவ, மாணவியர்களும், மாநில அளவில் 6 மாணவ, மாணவியர்களும் இப்பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளைப் பெற்றனர்.

 

Artist Centennial Speech Contest Chief Minister who presented the prizes

 

சென்னை கோயம்பேட்டில் உள்ள தூய தாமஸ் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழாவில், மாநில அளவில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவியருக்குப் பரிசுத் தொகைக்கான காசோலைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க. பொன்முடி, மா. சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் சா. பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர்  திண்டுக்கல் லியோனி என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.