Skip to main content

பணியில் இருந்த போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம்: ஒன்றரை வயது குழந்தையுடன் கதறிய மனைவி... ராமதாஸ், ஸ்டாலின், பி.ஆர்.பாண்டியன் இரங்கல்!

Published on 09/04/2020 | Edited on 09/04/2020

 

சென்னை மயிலாப்பூரில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் அருண்காந்தி மாரடைப்பால் மரணம் அடைந்தார். ராமதாஸ், ஸ்டாலின், பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

 

chennai mylapore - traffic police

 

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டரில், ''சென்னை மயிலாப்பூரில் பாதுகாப்புப் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் அருண்காந்தி மாரடைப்பால் காலமான செய்தி அறிந்து வேதனையடைந்தேன். மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு உயிர்நீத்த அவருக்கு வீரவணக்கம். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்'' எனக் குறிப்பிட்டுள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''மயிலாப்பூர் போக்குவரத்துப் பிரிவில் காவலராகப் பணிபுரிந்த அருண்காந்தி இன்று ஊரடங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்திருக்கிறார்.எனது அஞ்சலியையும், காவலரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நெருக்கடி சூழ்ந்த இந்த ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் காவலர்களுக்குப் பணிச்சுமை, மன அழுத்தம் ஆகியவை ஏற்படாதவாறு காவல்துறை தலைவரும், தமிழக அரசும் அக்கறை காட்ட வேண்டும்!
 

http://onelink.to/nknapp


சென்னை மயிலாப்பூரில் பாதுகாப்புப் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் அருண்காந்தி மாரடைப்பால் காலமான செய்தி அறிந்து வேதனையடைந்தேன். மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு உயிர்நீத்த அவருக்கு வீரவணக்கம். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்'' எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''திருவாரூர் மாவட்டம் வடுவூர் புதுக்கோட்டை மண்ணின் மைந்தன் சென்னை மாநகர காவல் துறையில் காவலராகப் பணியாற்றி வரும் தம்பி அருண்காந்தி கரோனா தடுப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு நேற்று (08.04.2020) பணியிடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தது மிகுந்த மன வேதனையளிக்கிறது.

இவரது சேவைக்கு ஈடு இணை இல்லை. மக்களைக் காக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியதின் விளைவு தன் உடலையே பலி கொடுத்து விட்டார்.தனது தாய்மாமனின் ஒரே மகளை மணமுடித்து 1-1/2 வயதே ஆன பெண் குழைந்தையோடு மனைவி பறிதவிப்பது அனைவரையும் மனமுடைய செய்கிறது. 
 

எனவே, தமிழக முதலமைச்சர் தனது நிவாரண நிதியில் இருந்து ரூ 1 கோடி உடனடியாக வழங்க வேண்டும். அவரது வாரிசுக்கு அரசு வேலை, மேலும் அவர் ஓய்வு பெறும் காலம் வரையிலான அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். 
 

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள அனைத்துச் சலுகைகளும் இவருக்கும் கிடைக்கச் செய்திட வேண்டும்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலையும்,அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் விவசாயிகள் சார்பில் ஆழ்ந்த மன வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். " எனக் கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.