Skip to main content

பிசிசிஐ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு!!

Published on 22/12/2018 | Edited on 22/12/2018

 

bcci

 

பிசிசிஐ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான  பிசிசிஐ மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  கீதாராணி என்பவரால் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணி எனக்கூறி இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த எந்த சட்டபூர்வமான உரிமையும் பிசிசிஐக்கு கிடையாது. மத்திய அரசின் அங்கீகாரம் இல்லாமல் கிரிக்கெட்டை நிர்வகிக்கும்  பிசிசிஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுக்கப்பட்டுள்ளது. 

 

இந்த வழக்கில் பிப்ரவரி 7-க்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கும், பிசிசிஐக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்