'பிக் சி' என்னும் மொபைல் பேசி விற்பனையக நிறுவனம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பரவலாக விற்பனையகங்களை கொண்டுள்ளது. இதன் கடந்த நிதியாண்டின் வருமானம் 1,015 கோடி ரூபாய் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது மேலும் இந்த நிதியாண்டில் அதை 1,500 கோடி ரூபாயாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளாதாகவும்.
இதுவரை தெலுங்கானாவில் 110 கடைகளும் மற்றும் ஆந்திராவில் 115 கடைகளையும் சேர்த்து 225 கடடைகளை கொண்டுள்ள அந்நிறுவனம், அடுத்த மாதம் தமிழ் நாட்டில் முதல் கட்டமாக 20 கடைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்திற்கான விளம்பரங்களில் இனி சமந்தா நடிப்பார் என்றும் அவர் தான் 'பிக் சி'யின் பிராண்ட் அம்பாசிடர் என்றும் பிக் சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர அடுத்த ஆண்டுக்குள் கர்நாடகாவிலும் தனது விற்பனையகங்களை தொடங்க இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
|
பிராண்ட் அம்பாசிடர் ஆகும் சமந்தா !
சார்ந்த செய்திகள்
Next Story
தங்கக் கோவிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம்
வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாராயணி தங்க கோவில். இங்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் வந்து சாமி தரிசனம் செய்ய வருகை தருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று பொற்கோவிலுக்கு வந்த பிரபல நடிகை சமந்தா ஸ்ரீ நாராயணி அம்மனை தரிசனம் செய்துள்ளார். பின்பு தங்கத்தினால் ஆன சொர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு தனது கையால் அபிஷேகம் செய்தும், தீபாராதனையும் செய்த பிறகு கோயிலை சுற்றி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து பொற்கோயில் மடாதிபதி சக்தி அம்மாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அவருக்கு சக்தி அம்மா பிரசாதத்தை வழங்கியுள்ளார். வேலூர் பொற்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த சமந்தாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களை நடிகை சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Next Story
கோஷ்ட் Vs பிரின்ஸஸ்... பாலிவுட்டில் மிரட்ட இருக்கும் சமந்தா
யசோதா, சாகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள சமந்தா, தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘குஷி’ எனும் படத்தில் நடித்து வருகிறார். ரொமான்டிக் கலந்த காமெடி படமாக உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. தென்னிந்திய மொழிகளில் பிரபலமாக இருக்கும் சமந்தா, தற்போது இந்தி திரையுலகில் கதாநாயகியாக என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
அதன்படி பாலிவுட் இயக்குநர் அமர் கௌசிக் இயக்கும் புதிய படத்தில் ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் சமந்தா இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளாராம். அதில் ஒன்று இளவரசி கதாபாத்திரம் என்றும், மற்றொன்று பேய் கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. அதற்காக தன்னை முழுவதுமாக தயார்படுத்திக்கொள்ள சமந்தா பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இதற்கு முன்பு பாலிவுட் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் தொடரில் சமந்தா நடித்திருந்தார். இத்தொடர் வெளியாகி பெரும் விமர்சனத்தையும், எதிர்ப்பையும் சம்பாதித்த நிலையில், சமந்தாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து ‘தி ஃபேமிலி மேன்’ தொடரின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டீகே இயக்கும் மற்றொரு வெப் தொடரில் வருண் தவானுடன் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.