Skip to main content

தமிழகம் வருகிறது நடராஜர் சிலை... சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சாதனை.

Published on 13/09/2019 | Edited on 13/09/2019

நெல்லை மாவட்டத்தின் தாமிரபரணிக் கரை அருகில் கல்லிடைக்குறிச்சி நகரில் அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் ஆலயம் உள்ளது. இந்த கோவில் மன்னர் குலசேகரப்பாண்டியனால் சுமார் 700 ஆண்டுகளுக்ககு முன்பு கட்டப்பட்டதாக வரலாறு குறிப்பிடுகிறது. மேலும் மன்னரால் படித்தனமாக கோவிலுக்கு நில புலன்கள் தரப்பட்டும், அவரால் மதிப்பு மிக்க ஐம்பொன் சிலைகளும் செய்யப்பட்டு, அந்த சிலைக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரளவு பராமரிக்கப்பட்டு வந்த இந்த ஆலயம், குறைபாடுகள் காரணமாகப் புராதன ஆலயமாக மாறிப்போனாலும், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் வந்தது. விலை மதிப்பற்ற சிலைகள் இருந்தாலும், அதன் மதிப்பறியாத துறை போதிய பாதுகாப்பு வசதிகளைச் செய்யவில்லை, என்பது கவனிககத்தக்கது. அதுவே திருட்டிற்கும் வழி வகுத்து விட்டது.
 

Statue of Nataraja lord comes to Tamil Nadu  Statue Trafficking Prevention Unit Adventure.


இதனிடையே பக்தர்களின் வழிபாட்டிற்குரிய சிறப்புகளைக் கொண்ட நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்க வாசகர் மற்றும் ஸ்ரீபலிநாதர் உள்ளிட்ட ஐம்பொன்னாலான நான்கு சிலைகள் கடந்த 1982 ஏப்ரல் மாதம் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. கோவில் கருவறையின் இரும்புக் கதவின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து அப்போதைய கோவில் டிரஸ்டியான பாபநாச முதலியார் கல்லிடைக்குறிச்சிக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், பல நூறு ஆண்டுகள் பழமையான இரண்டரை அடி உயரமுள்ள நடராஜர் சிலை. இரண்டு அடி உயரம் கொண்ட சிவகாமி அம்பாள் சிலை, ஒன்றரை அடி உயரமுள்ள மாணிக்கவாசகர் சிலை ஒரு அடி உயரமுள்ள ஸ்ரீபலிநாயகர் என்று ஐம்பொன் சிலைகள் திருடு போனதும் அவைகளில் நடராஜர் சிலை மட்டும் 30 கோடி மதிப்புள்ளது என்றும் தெரிய வந்தது.

Statue of Nataraja lord comes to Tamil Nadu  Statue Trafficking Prevention Unit Adventure.

ஒரு கட்டத்திற்கு மேல் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் இது நிலுவையில் வைக்கப்பட்டது. பின்னர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யான பொன்.மாணிக்கவேலின் குழுவினர் கோவிலை ஆராய்ந்தனர். அதன் பிறகு விசாரணை மேற்கொண்டனர். மேலும் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் போன்றவைகளை ஆய்வு செய்து அவைகளின் பாதுகாப்பற்ற தன்மையை தெரிந்து கொண்டார். இதனால் மீதமுள்ள 17 சிலைகள் அருகிலுள்ள சுப்பிரமணியசுவாமி ஆலயத்திற்கு மாற்றப்பட்டது.

Statue of Nataraja lord comes to Tamil Nadu  Statue Trafficking Prevention Unit Adventure.


அதன் பின் ஐ.ஜி.யின் விசாரணையில் கொள்ளை போன சிலைகளில் நடராஜர் சிலை மட்டும் ஆஸ்திரேலியாவிலுள்ள அடிலாய்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரிய வர, அதனை மத்திய அரசின் உதவியோடு மீட்டனர். ஆஸ்திரேலியா சென்ற சிலை தடுப்பு பிரிவினர் அருங்காட்சியப் பதிவாளர் ஜேன் ராபின்சன், மற்றும் ஜேம்ஸ் பென்னட் ஆகியோரிடமிருந்து நடராஜர் சிலையப் பெற்றனர். பின்னர் அது டெல்லி கொண்டு வரப்பட்டு பின்பு கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனி நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தப்பட்டு அதன் பின் நடராஜர், மக்களின் வழிபாட்டிற்காக கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் ஆலையம் கொண்டு வரப்படுகிறார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.