Skip to main content

சொத்துகுவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைவாசம்... 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா?

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

Sasikala

 

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை அனுபவித்த சசிகலா இன்று (27.01.2021) காலை 10.30 மணிக்கு விடுதலையாக உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலாவுக்கு, கடந்த 20 ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு, பின்னர் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது கரோனா தொற்று நீங்கியிருந்தாலும் தொடர்ந்து அவருக்கு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நான்காண்டு கால சிறைவாசத்திலிருந்து இன்று காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலையாக இருக்கிறார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலாவிடம் காலை 9 மணியளவில் அதிகாரிகள் கையெழுத்து பெற இருக்கின்றனர். சிறைத்துறை நடைமுறைகள் முடிந்ததும் 10:30 மணிக்கு சசிகலா விடுதலையாக உள்ளார். 

 

அதேபோல் சிறைவாசம் முடிந்தாலும் மருத்துவமனையில் கரோனாவுக்கு தொடர்ந்து சிகிச்சை பெறுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

சார்ந்த செய்திகள்